நாட்டின் உருக்கு உற்பத்தி 65 லட்சம் டன்னாக அதிகரிப்புநாட்டின் உருக்கு உற்பத்தி 65 லட்சம் டன்னாக அதிகரிப்பு ... பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் பால் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும் ...
கம்ப்யூட்டர் விற்பனை8சதவீதம் வளர்ச்சி காணும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2013
00:56

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் கம்ப்யூட்டர் விற்பனை, 121.10 லட்சமாக அதிகரிக்கும். இது, கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 8சதவீதம் அதிகம் என, தகவல் தொழில்நுட்ப கூட்டமைப்பு (எம்.ஏ.ஐ.டி.,) தெரிவித்துள்ளது.
கம்ப்யூட்டர்சந்தையில், "டேப்லெட்' வகை கம்ப்யூட்டர் விற்பனை வளர்ச்சி சிறப்பான அளவில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், இவ்வகை கம்ப்யூட்டர் விற்பனை, 424சதவீதம் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.சென்ற 2012-13ம் நிதியாண்டில், இந்தியாவில், 113.10 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, இதற்கு முந்தைய நிதியாண்டு விற்பனையுடன் (108.20 லட்சம்) ஒப்பிடுகையில், 5சதவீதம் அதிகமாகும்.
சென்ற நிதியாண்டில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் விற்பனை, 1சதவீதம் வளர்ச்சி கண்டு, 67.69 லட்சமாக உயர்ந்துள் ளது. இதன் மூலம் கிடைத்த வருவாய் 13,468 கோடி ரூபாயாக இருந்தது. இவை, இதற்கு முந்தைய நிதியாண்டில், முறையே, 67.12 லட்சம் மற்றும் 13,527 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தன.
மேலும், நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை, 16சதவீதம் வளர்ச்சி கண்டு, 37.24 லட்சத்திலிருந்து (ரூ. 10,318 கோடி வருவாய்), 43.08 லட்சமாக (ரூ.11,804 கோடி வருவாய்) உயர்ந்துள்ளது.அதேசமயம், சென்ற நிதியாண்டில், செர்வர் விற்பனை, 2சதவீதம்சரிவடைந்து, 90,699 என்ற எண்ணிக்கையிலிருந்து (ரூ.1,637 கோடி வருவாய்), 89,075 ஆக (ரூ.1,610 கோடி வருவாய்) குறைந்து உள்ளது என, எம்.ஏ.ஐ.டி., மேலும் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)