பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
00:58
புதுடில்லி:இந்தியாவில், வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், அவற்றின் புதிய திட்டங் களுக்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில், 7,000 கோடி ரூபாய் அளவிற்கு, முதலீடு செய்ய உள்ளன.
சர்வதேச பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தால், இந்திய தொழில்துறையின் வளர்ச்சி, மந்தம் அடைந்துள்ளது.கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக, மோட்டார் வாகனத் துறையின் வளர்ச்சி,சரிவை கண்டு வருகிறது.இந்த நிலையிலும், மோட்டார் வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், புதிய முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன.
இதற்கு, வாகனத் துறையின் மந்தநிலை, தற்காலிகமானது என்ற எண்ணம் தான் காரணம் என, இத்துறை சார்ந்தவர் கள் தெரிவித்தனர்.இதற்கு வலு சேர்க்கும் விதமாக, மாருதி ”‹கி, ஹீரோமோட்டார் கார்ப் மற்றும் போர்டு இந்தியா நிறுவனங்கள், குஜராத்தில், புதிய வாகனத் தொழிற்சாலைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.இந்த தொழிற்சாலைகளுக்கு அருகே, வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், அவற்றின் தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளன.
இது போன்ற திட்டங்களுக்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில், வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்கள், 7,000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யும் என, "இக்ரா' அமைப்பின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|