பதிவு செய்த நாள்
25 ஜூலை2013
01:00
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்புசரிவை தடுக்கும் வகையில், பணப் புழக்கத்தை கட்டுப்படுத்த, கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் என, ரிசர்வ் வங்கி, நேற்று முன்தினம் அறிவிப்பு செய்திருந்தது.
இது, நேற்றைய வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், "சென்செக்ஸ்' 1.04சதவீதம்சரிவடைவதற்கும் வழி வகுத்தது.நடப்பு மாதத்தில், சீனாவில் தொழில்துறை உற்பத்திசரிவடையும் என்ற நிலைப்பாட்டால், இதர ஆசியப் பங்குச்சந்தைகளிலும், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இருப்பினும், ஐரோப்பிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் நன்கு இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், வங்கி, நுகர்வோர்சாதனங்கள், பொறியியல், உலோகம் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்ப துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு மட்டும் ஓரளவிற்கு தேவை காணப்பட்டது.
மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 211.45 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 20,090.68 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச்சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 20,252.70 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,994.25 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ஜிந்தால் ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க், எல் அண்டு டி உள்ளிட்ட, 21 நிறுவனப் பங்குகளின் விலைசரிவடைந்தும், பார்தி ஏர்டெல், விப்ரோ, டி.சி.எஸ்., உள்ளிட்ட, 9 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 87.30 புள்ளிகள்சரிவுஅடைந்து, 5,990.50 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 6,047.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,962.60 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|