தானிய உற்பத்தி அதிகரிப்பால் இறக்குமதி செலவினம் ரூ.4,350 கோடி குறையும்தானிய உற்பத்தி அதிகரிப்பால் இறக்குமதி செலவினம் ரூ.4,350 கோடி குறையும் ... பூஞ்சை நோய் தாக்குதலால்ஏலக்காய் உற்பத்தி பாதிப்பு பூஞ்சை நோய் தாக்குதலால்ஏலக்காய் உற்பத்தி பாதிப்பு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ரிசர்வ் வங்கி உத்தரவால்ஆபரணங்கள் ஏற்றுமதி உயரும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
03:45

புதுடில்லி:நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுள் ஒன்றாக, இறக்குமதி செய்து கொள்ளும் மொத்த தங்கத்தில், 20 சதவீதத்தை, ஏற்றுமதி @தவைகளுக்காக இருப்பு வைக்க வேண்டும் என, வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு, அண்மையில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி, வரும் மாதங்களில் அதிகரிக்கும் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பயன்பாடு:உலகளவில் தங்கம் பயன்பாட்டில், இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. எனினும், உள்நாட்டில், இதன் உற்பத்தி @பாதிய அளவிற்கு இல்லை. இதையடுத்து, உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதி @தவைகளுக்காக, அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.குறிப்பாக, கடந்த, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 845 டன்னாக அதிகரித்து உள்ளது. இதனால், அன்னியச் செலாவணி அதிகளவில் வெளியேறுவதோடு மட்டுமின்றி, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
எனவே, இதை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசும், தங்கம் மீதான இறக்குமதி வரியை, 6 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக உயர்த்தியது.தங்கம் இருப்புஇந்நிலையில், ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதியில், ஐந்தில் ஒரு பங்கை ஏற்றுமதி தேவைக்காக இருப்பு வைக்க வேண்டும் என, உத்தரவிட்டதை தொடர்ந்து, நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 15-20 சதவீதம் அதிகரிக்கும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் கொலின் ஷா தெரிவித்தார்.சென்ற நிதியாண்டில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 1,828 @காடி டாலர் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)