பதிவு செய்த நாள்
29 ஜூலை2013
03:45
புதுடில்லி:நடப்பு கணக்கு பற்றாக்குறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுள் ஒன்றாக, இறக்குமதி செய்து கொள்ளும் மொத்த தங்கத்தில், 20 சதவீதத்தை, ஏற்றுமதி @தவைகளுக்காக இருப்பு வைக்க வேண்டும் என, வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கு, அண்மையில், ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி, வரும் மாதங்களில் அதிகரிக்கும் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
பயன்பாடு:உலகளவில் தங்கம் பயன்பாட்டில், இந்தியா முன்னணி நாடுகளுள் ஒன்றாக திகழ்கிறது. எனினும், உள்நாட்டில், இதன் உற்பத்தி @பாதிய அளவிற்கு இல்லை. இதையடுத்து, உள்நாட்டு பயன்பாடு மற்றும் ஏற்றுமதி @தவைகளுக்காக, அதிகளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது.குறிப்பாக, கடந்த, 2012-13ம் நிதியாண்டில், நாட்டின் தங்கம் இறக்குமதி, 845 டன்னாக அதிகரித்து உள்ளது. இதனால், அன்னியச் செலாவணி அதிகளவில் வெளியேறுவதோடு மட்டுமின்றி, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் வெகுவாக உயர்ந்துள்ளது.
எனவே, இதை கட்டுப்படுத்தும் வகையில், ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மத்திய அரசும், தங்கம் மீதான இறக்குமதி வரியை, 6 சதவீதத்திலிருந்து, 8 சதவீதமாக உயர்த்தியது.தங்கம் இருப்புஇந்நிலையில், ரிசர்வ் வங்கியும், தங்கம் இறக்குமதியில், ஐந்தில் ஒரு பங்கை ஏற்றுமதி தேவைக்காக இருப்பு வைக்க வேண்டும் என, உத்தரவிட்டதை தொடர்ந்து, நாட்டின் ஆபரணங்கள் ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டில், 15-20 சதவீதம் அதிகரிக்கும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் ஒருங்கிணைப்பாளர் கொலின் ஷா தெரிவித்தார்.சென்ற நிதியாண்டில், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 1,828 @காடி டாலர் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|