பதிவு செய்த நாள்
30 ஜூலை2013
02:03
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் துவக்க வர்த்தக தினமானநேற்று, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. ரிசர்வ் வங்கி, இன்று வெளியிட உள்ள நிதி ஆய்வுக் கொள்கையின் சாதக, பாதக அம்சங்களை எதிர்நோக்கி, முதலீட்டாளர்கள், மிகுந்த எச்சரிக்கையுடன், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டனர்.இதனால், தொடர்ந்து நான்கு வர்த்தக தினங்களாக, இந்திய பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன. எனினும், ஐரோப்பா மற்றும் இதர ஆசிய நாடுகளில் பங்கு வர்த்தகம், ஓரளவிற்கு நன்கு இருந்தது.
நேற்றைய வியாபாரத்தில், மருந்து, வங்கி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகள், குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், தகவல் தொழில்நுட்பம், உருக்கு,மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச்சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்குதேவை காணப்பட்டது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 154.91 புள்ளிகள் சரிவடைந்து, 19,593.28 புள்ளிகளில் நிலை கொண்டது.
வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,751.03 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,570.87 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், மாருதி சுசூகி, இண்டால்கோ,கோல் இந்தியா உள்ளிட்ட, 20 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், ஜிந்தால் ஸ்டீல், டாட்டாமோட்டார்ஸ் உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி,' 54.55 புள்ளிகள் குறைந்து, 5,831.20 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,886 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,825.80 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|