சர்க்கரை விலை உயரும் "இக்ரா' மதிப்பீடு  சர்க்கரை விலை உயரும் "இக்ரா' மதிப்பீடு ... கைவினை பொருட்கள் ஏற்றுமதிரூ.33 ஆயிரம் கோடி இலக்கு கைவினை பொருட்கள் ஏற்றுமதிரூ.33 ஆயிரம் கோடி இலக்கு ...
தமிழகத்தில் அரிசி விலை குறைகிறதுகர்நாடகாவிலிருந்து வரத்து அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2013
01:34

திண்டுக்கல்:கர்நாடகாவிலிருந்து, பொன்னி ரக அரிசி மூட்டைகள், அதிகளவில் தமிழகத்திற்கு வருவதால், மூட்டைக்கு, 300 ரூபாய் வரை குறைந்துள்ளது. கர்நாடகாவிலிருந்து, பொன்னி ரக அரிசி, தமிழகத்திற்கு அதிகளவு வரவழைக்கப் படுகிறது.
பதுக்கல்:கர்நாடகாவில், கடந்தசில மாதங்களுக்கு முன், மழைபெய்யாததால், இரண்டாவது போகம், நெல்விளைச்சல் பாதிக்கப்பட்டு, அரிசி விலைஉயரும் என, வியாபாரிகள் எதிர்பார்த்தனர். இதனால், நெல் மூட்டைகளை வாங்கி அரவைக்கு, ஆலைகளுக்கு அனுப்பாமல், இருப்பு வைத்தனர்.இதன் காரணமாக, அரிசி விலை அதிகரித்து, தேவையான அளவிற்கு மூட்டைகளை வாங்க முடியாமல், தமிழக மொத்த வியாபாரிகள் தவித்தனர். தமிழகத்தில் பொன்னி ரக அரிசி விலை, கிலோ, 55லிருந்து, 60 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தற்போது, கர்நாடகாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், இரண்டாவதுபோக சாகுபடிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், லாபத்தை எதிர்பார்த்து, நெல் மூட்டைகளை பதுக்கிய கர்நாடக வியாபாரிகள், தற்போது அரவை ஆலைகளுக்கு அனுப்ப துவங்கி உள்ளனர். இதனால், தமிழகத்திற்கு தேவையான கர்நாடக பொன்னி அரிசி அதிக அளவில் வரத் துவங்கியுள்ளது.
மந்த நிலை:திண்டுக்கல் அரிசி மொத்த விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "பொன்னி ரக அரிசியின் விலை, கிலோ, மூன்று ரூபாயும், மூட்டைக்கு, 300 ரூபாயும் குறைந்துள்ளது. மேலும், விலை குறைய வாய்ப்புள்ளதால், மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்குவோர் காத்திருக்க துவங்கியுள்ளனர். இதனால், விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)