பதிவு செய்த நாள்
05 ஆக2013
01:34
திண்டுக்கல்:கர்நாடகாவிலிருந்து, பொன்னி ரக அரிசி மூட்டைகள், அதிகளவில் தமிழகத்திற்கு வருவதால், மூட்டைக்கு, 300 ரூபாய் வரை குறைந்துள்ளது. கர்நாடகாவிலிருந்து, பொன்னி ரக அரிசி, தமிழகத்திற்கு அதிகளவு வரவழைக்கப் படுகிறது.
பதுக்கல்:கர்நாடகாவில், கடந்தசில மாதங்களுக்கு முன், மழைபெய்யாததால், இரண்டாவது போகம், நெல்விளைச்சல் பாதிக்கப்பட்டு, அரிசி விலைஉயரும் என, வியாபாரிகள் எதிர்பார்த்தனர். இதனால், நெல் மூட்டைகளை வாங்கி அரவைக்கு, ஆலைகளுக்கு அனுப்பாமல், இருப்பு வைத்தனர்.இதன் காரணமாக, அரிசி விலை அதிகரித்து, தேவையான அளவிற்கு மூட்டைகளை வாங்க முடியாமல், தமிழக மொத்த வியாபாரிகள் தவித்தனர். தமிழகத்தில் பொன்னி ரக அரிசி விலை, கிலோ, 55லிருந்து, 60 ரூபாய் வரை விற்கப்பட்டது.
தற்போது, கர்நாடகாவில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக, அனைத்து அணைகளும் நிரம்பி வழிவதால், இரண்டாவதுபோக சாகுபடிக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், லாபத்தை எதிர்பார்த்து, நெல் மூட்டைகளை பதுக்கிய கர்நாடக வியாபாரிகள், தற்போது அரவை ஆலைகளுக்கு அனுப்ப துவங்கி உள்ளனர். இதனால், தமிழகத்திற்கு தேவையான கர்நாடக பொன்னி அரிசி அதிக அளவில் வரத் துவங்கியுள்ளது.
மந்த நிலை:திண்டுக்கல் அரிசி மொத்த விற்பனையாளர் ஒருவர் கூறுகையில், "பொன்னி ரக அரிசியின் விலை, கிலோ, மூன்று ரூபாயும், மூட்டைக்கு, 300 ரூபாயும் குறைந்துள்ளது. மேலும், விலை குறைய வாய்ப்புள்ளதால், மொத்தமாக அரிசி மூட்டைகளை வாங்குவோர் காத்திருக்க துவங்கியுள்ளனர். இதனால், விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|