பதிவு செய்த நாள்
06 ஆக2013
02:32
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வாரத்தின் முதல் நாளான நேற்று, நன்கு ஏற்றம் கண்டது.சென்ற வார இறுதியில், ரூபாய் மதிப்பு, 61.10 ஆக மிகவும் சரிவடைந்து இருந்தது.இந்நிலையில், நேற்று அன்னியச் செலாவணி வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 22 கா”கள் அதிகரித்து, 60.88ஆக உயர்ந்தது. இந்த மதிப்பு, ஒரு கட்டத்தில், 60.78 ஆக மேலும் உயர்ந்தது.
ஏற்ற, இறக்கமாக காணப்பட்ட வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 22 கா”கள் உயர்ந்து, 60.88ல் நிலை பெற்றது.அமெரிக்காவில், வேலை வாய்ப்பு அதிகரித்துள்ள போதிலும், அது, சந்தை எதிர்பார்ப்பை விட குறைவாக இருந்ததால், சர்வதேச கரன்சிகளுக்கு எதிரான டாலர் மதிப்பு நேற்று சரிவடைந்தது. இத்துடன், வங்கிகளும் அதிக அளவில் டாலரை புழக்கத்தில் விட்டதால், ரூபாய் மதிப்பு அதிகரித்தது. நடப்பு வாரத்தில், ரூபாய் மதிப்பு, 60.50 - 61.30க்குள் ஏற்ற, இறக்கமாக இருக்கும் என, அன்னியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|