பதிவு செய்த நாள்
08 ஆக2013
00:59
மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் புதன்கிழமையன்றும் மிகவும் மந்தமாகவே இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதக மாக இல்லாதது மற்றும் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி, அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது போன்ற வற்றால், நேற்றும், இந்திய பங்குச் சந்தைகளில் வியாபாரம் சரிவுடன் முடிவடைந்தன.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இதுவும் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 68.16 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,664.88 புள்ளி களில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 18,811.46 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,551.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், டாட்டா மோட்டர்ஸ், டி.சி.எஸ்., சன்பார்மா உள்ளிட்ட, 14 நிறு வனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், டாட்டா பவர், ஸ்டெர்லைட் இந்தியா, டாட்டா ஸ்டீல் உள்ளிட்ட, 16 நிறுவ னப்பங்குகளின் விலை உயர்ந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி', 23.15 புள்ளிகள் சரிவடைந்து, 5,519.10 புள்ளிகளில் நிலை பெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,561.45 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,486.85 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|