தேயிலை உற்பத்தியில் தெற்கை விஞ்சியது வடக்குதேயிலை உற்பத்தியில் தெற்கை விஞ்சியது வடக்கு ... கோல் இந்தியா பங்கு விற்பனையில்ரூ.8,400 கோடி திரட்ட  அரசு திட்டம் கோல் இந்தியா பங்கு விற்பனையில்ரூ.8,400 கோடி திரட்ட அரசு திட்டம் ...
நெடுஞ்சாலைகள் திட்டம்: மத்திய அரசின் இலக்கு தவறியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2013
00:26

புதுடில்லி:பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த, 2009ம் ஆண்டு, இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்ததும், நாள்தோறும், 20 கி.மீ., தூரம் நெடுஞ்சாலை அமைக்க இலக்கு நிர்ணயித்தது.
புள்ளிவிவரம்:ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், இந்த இலக்கை எட்டும் அளவிற்கு, நெடுஞ்சாலைகள் அமைக்கப்படவில்லை என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2009-10ம் நிதிஆண்டில், நாள்தோறும் சராசரியாக, 14.5 கி.மீ., தூரம் மட்டுமே நெடுஞ்சாலைகள் போடப்பட்டு உள்ளன.
இது, 2010-11ம் நிதியாண்டில், 11.87 கி.மீ., ஆக குறைந்தது. கடந்த 2011-12ம் நிதியாண்டில், 13.73 கி.மீ., மற்றும் 2012-13ம் நிதியாண்டில், 15.7 கி.மீ., தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன.நடப்பு 2013-14ம் நிதிஆண்டில், மொத்தம், 5,942 கி.மீ., தூரத்திற்கு நெடுஞ்சாலைகள் அமைக்க திட்டம் இடப்பட்டுள்ளது. இதில், சென்ற ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 19 சதவீதம், அதாவது, 1,183 கி.மீ., அளவிற்கே நெடுஞ்சாலைகள் போடப்பட்டு உள்ளன.
இதன்படி, நாள்தோறும் சராசரியாக, 13.14 கி.மீ., தூரம் என்ற அளவிற்கே, நெடுஞ்சாலைப் பணிகள் நடைபெற்றுள்ளன.கடந்த 2012-13ம் நிதிஆண்டு முதல், நெடுஞ்சாலைப் பணிகள் வழங்குவது குறைந்துள்ளது. இருந்தபோதிலும், 2009-10 மற்றும் 2010-11ம் நிதியாண்டுகளில் வழங்கப்பட்ட நெடுஞ்சாலைப் பணிகள் முடிவடைந்து வருவதால், பூர்த்தியான நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை, சென்ற நிதியாண்டில் அதிகரித்து உள்ளது.
பணிகள்:கடந்த 2012-13ம் நிதிஆண்டில், 5,700 கி.மீ., தூரம் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், போடப்பட்ட, 2,939 கி.மீ., நெடுஞ்சாலைகளும் அடங்கும்.நடப்பு நிதியாண்டில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3,000 கி.மீ., சாலை அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பழங்குடியினர்:இத்திட்டம் சாராத பிரிவின் கீழ், 1,292 கி.மீ., சாலையும், வட கிழக்கு பிராந்தியங்களில், சிறப்பு உயர்மட்ட நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 550 கி.மீ., மற்றும் பழங்குடியினர் நக்சலைட்டு ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில், 1,100 கி.மீ., சாலைகளும் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அடுத்த ஆண்டு, பொதுத் தேர்தல் வருவதைஒட்டி, நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)