பதிவு செய்த நாள்
15 ஆக2013
00:08
புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கே, அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
பற்றாக்குறை:பொருளாதார வளர்ச்சி, பணவீக்கம் அதிகரிப்பு, நடப்பு கணக்கு பற்றாக்குறை, திட்ட பணிகளில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்டவை குறித்து, எதிர்க்கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, சிதம்பரம் பதில்அளித்து பேசியதாவது: தற்போதைய நிலையில், அன்னிய மற்றும் உள்நாட்டு நிலவரங்களால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிகவும் பாதிப்புக்குள்ளாகிஉள்ளது.
எனவே, பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, ரூபாய்மதிப்பு சரிவு நிலையை கட்டுப்படுத்துவது மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.7 சதவீதமாக நிலை நிறுத்துவது போன்றவற்றிற்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மத்திய அரசு, நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
சமையல் எண்ணெய்:பெட்ரோலிய பொருட்கள், சமையல் எண்ணெய், பொறியியல் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கான செலவினம் அதிகரித்து வருகிறது. இவற்றின் இறக்குமதியை குறைத்தால், அது, நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும்.அதேசமயம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய மற்ற பொருட்களின் இறக்குமதியை தடுக்கும் வகையில், அவற்றின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சிகளின் கருத்தையும் ஏற்று, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார். வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இவற்றை தடுக்க, அரசு, நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும், மொத்தத்தில், மத்திய அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை எனவும், எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.
கட்டமைப்பு திட்டங்கள்:நாட்டின் அடிப்படை கட்டமைப்பு திட்டங்கள், மின் உற்பத்தி போன்றவை மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது என, பா.ஜ.க., எம்.பி., ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.வாஜ்பாய்ஆட்சியில், நெடுஞ்சாலை திட்டங்கள் விரைவாக மேற்கொள்ளப் பட்டன. குறிப்பாக, நாள் ஒன்றுக்கு, 11 கி.மீ., தொலைவிற்கு சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், தற்போதைய ஆட்சியில் இது, நாள் ஒன்றுக்கு, 2-3 கிலோ மீட்டராக குறைந்துள்ளது.
வளர்ச்சி பணிகள் ஆனால், நாள் ஒன்றுக்கு, 20 கி.மீ., அளவிற்கு சாலை பணிகள் மேற்கொள்ளப்படும் என, அறிவிப்பு மட்டும் வெளியானது. ஒட்டு மொத்த அளவில், மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி பணிகளில் முழு ஈடுபாடு காட்டவில்லை என, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். இதற்கு நேரடியாக பதில்அளிக்காமல், எப்பொழுதும் போல புள்ளிவிவரங்களை வெளியிட்டு சமாளித்தார் சிதம்பரம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|