இந்திய இறால் இறக்குமதிக்குஅமெரிக்க அரசு வரி குறைப்புஇந்திய இறால் இறக்குமதிக்குஅமெரிக்க அரசு வரி குறைப்பு ... கூடுதல் விளம்பர வருவாய்ஈட்ட ரயில்வே தவறிவிட்டது:சி.ஏ.ஜி., குற்றச்சாட்டு கூடுதல் விளம்பர வருவாய்ஈட்ட ரயில்வே தவறிவிட்டது:சி.ஏ.ஜி., குற்றச்சாட்டு ...
சென்னை துறைமுகத்தில் மேலும் ஒரு சரக்கு பெட்டக முனையம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
01:00

புதுடில்லி:சென்னை துறைமுகத்தில், கிழக்கில் உள்ள ஜவகர் சரக்கு முனையத்தை, சரக்கு பெட்டக முனையமாக மாற்ற, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள்:சென்னை துறைமுகத்தில், தற்போது, இரண்டு சரக்கு பெட்டக முனையங்கள் உள்ளன. தனியார் துறையை சேர்ந்த டீ.பி.வேர்ல்டு சென்னை, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின், சென்னை இன்டர் நேஷ னல் டெர்மினல்ஸ் ஆகியவை, இந்த சரக்கு பெட்டக முனையங்களை நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், மூன்றாவதாக, 4,200 கோடி ரூபாய்திட்டச் செலவில், மிகப் பிரமாண்டமான சரக்கு பெட்டக முனையம் அமைக்க, சென்னை துறைமுக பொறுப்பு கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலைதிட்டம் முடங்கியுள்ளதால், தனியார் நிறுவனங்கள், புதிய சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் திட்டத்தில் பங்கேற்க, ஆர்வம் காட்டாமல் உள்ளன.இதையடுத்து, ஜவகர் சரக்கு முனையத்தை,சிறிய அளவிலான சரக்கு பெட்டக முனையமாக மாற்ற, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த முனையத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நிலக்கரி இறக்குமதி மேற்கொள்ளப்பட்டு வந்தது. சுற்றுச் சூழல் பிரச்னையால், தற்போது, நிலக்கரி கையாளும் பணியை, எண்ணூர் துறைமுகம் மேற்கொண்டு வருகிறது.
ஒப்பந்தம்:அதனால்,இந்த முனையத்தை,8 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளக் கூடிய சிறிய முனையமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த முனையத்தை வடிவமைத்து, கட்டி, 30 ஆண்டுகளுக்கு நிர்வகித்து, பின்னர் ஒப்படைக்க முன்வரும் தனியார் நிறுவனத்துடன், சென்னை துறைமுகம் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. மேற்கண்ட தகவல்களை சென்னை துறைமுக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)