பதிவு செய்த நாள்
16 ஆக2013
01:00
புதுடில்லி:சென்னை துறைமுகத்தில், கிழக்கில் உள்ள ஜவகர் சரக்கு முனையத்தை, சரக்கு பெட்டக முனையமாக மாற்ற, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் திட்டமிட்டுள்ளது.
தனியார் நிறுவனங்கள்:சென்னை துறைமுகத்தில், தற்போது, இரண்டு சரக்கு பெட்டக முனையங்கள் உள்ளன. தனியார் துறையை சேர்ந்த டீ.பி.வேர்ல்டு சென்னை, சிங்கப்பூர் துறைமுக ஆணையத்தின், சென்னை இன்டர் நேஷ னல் டெர்மினல்ஸ் ஆகியவை, இந்த சரக்கு பெட்டக முனையங்களை நிர்வகித்து வருகின்றன. இந்நிலையில், மூன்றாவதாக, 4,200 கோடி ரூபாய்திட்டச் செலவில், மிகப் பிரமாண்டமான சரக்கு பெட்டக முனையம் அமைக்க, சென்னை துறைமுக பொறுப்பு கழகம் திட்டமிட்டுள்ளது.
ஆனால், சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலைதிட்டம் முடங்கியுள்ளதால், தனியார் நிறுவனங்கள், புதிய சரக்கு பெட்டக முனையம் அமைக்கும் திட்டத்தில் பங்கேற்க, ஆர்வம் காட்டாமல் உள்ளன.இதையடுத்து, ஜவகர் சரக்கு முனையத்தை,சிறிய அளவிலான சரக்கு பெட்டக முனையமாக மாற்ற, சென்னை துறைமுக பொறுப்புக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இந்த முனையத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, நிலக்கரி இறக்குமதி மேற்கொள்ளப்பட்டு வந்தது. சுற்றுச் சூழல் பிரச்னையால், தற்போது, நிலக்கரி கையாளும் பணியை, எண்ணூர் துறைமுகம் மேற்கொண்டு வருகிறது.
ஒப்பந்தம்:அதனால்,இந்த முனையத்தை,8 லட்சம் சரக்கு பெட்டகங்களை கையாளக் கூடிய சிறிய முனையமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த முனையத்தை வடிவமைத்து, கட்டி, 30 ஆண்டுகளுக்கு நிர்வகித்து, பின்னர் ஒப்படைக்க முன்வரும் தனியார் நிறுவனத்துடன், சென்னை துறைமுகம் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளது. மேற்கண்ட தகவல்களை சென்னை துறைமுக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|