சென்னை துறைமுகத்தில் மேலும் ஒரு சரக்கு பெட்டக முனையம்சென்னை துறைமுகத்தில் மேலும் ஒரு சரக்கு பெட்டக முனையம் ... சரிவில் இருந்து மீண்டது ரூபாயின் மதிப்பு சரிவில் இருந்து மீண்டது ரூபாயின் மதிப்பு ...
கூடுதல் விளம்பர வருவாய்ஈட்ட ரயில்வே தவறிவிட்டது:சி.ஏ.ஜி., குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2013
01:10

புதுடில்லி:ரயில்வேயில் விளம்பரம் செய்வதற்கான உரிமங்களை பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கியதில், இந்திய ரயில்வே மேலும் அதிக வருவாயை ஈட்டியிருக்கலாம் என, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) தெரிவித்து உள்ளது.
அதே சமயம், ரயில்வே வாரியம், கள ஆய்வு மேற்கொள்ளாமல், ரயில்வே வருவாய்இலக்கை, அதிகம் நிர்ணயித் துள்ளதாகவும் சி.ஏ.ஜி., குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து, இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திய ரயில்வே, கடந்த, 2008-12ம் நிதியாண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில், விளம்பர உரிமங்களை வழங்கியதன் மூலம், 864 கோடி ரூபாய்ஈட்டியுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கு:ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில் டிக்கெட்டுகள், முன்பதிவு விண்ணப்பங்கள் உள்ளி ட்டவற்றில் விளம்பரம் செய்ய, பல்வேறு நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கிய வகையில், மேற்கண்ட தொகை வசூ லிக்கப்பட்டு உள்ளது.இது, கடந்த, 2010-11ம் நிதிஆண்டிற்கு, நிர்ணயிக்கப்பட்ட வருவாய்இலக்கான,1,000 கோடி ரூபாயை விட, மிகவும் குறைவாகும்.அதாவது, ஐந்து ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட தொகையை விட, ஓராண் டிற்கு நிர்ணயிக்கப்பட்ட வருவாய்இலக்கு அதிகமாக உள்ளது.
ரயில்வே வாரியம், சந்தை நிலவரம், விளம்பர மதிப்பு குறித்து சரிவர கணிக்காமல், ரயில்வே வருவாய்குறித்த மதிப்பீட்டை வெளியிட்டு உள்ளது.மேலும்,மண்டல ரயில்வே நிர்வாகங்களை கலந்தாலோசிக்காமல், வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.அதே சமயம்,மண்டல ரயில்வே நிர்வாகங்களும்,தனியார் நிறுவனங்கள் மூலம், விளம்பரங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலான வருவாய்ஆதாரத்தை மதிப்பீடு செய்யவில்லை.
அதிக ஆர்வம்:இத்தகைய செயல்பாடுகளை மேற்கொண்டிருந்தால்,இந்திய ரயில்வே, விளம்பர உரிமங்களை வழங்கியதன் மூலம், கூடுதல் வருவாய் ஈட்டியிருக்கலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந் திய ரயில்வே,65 ஆயிரம் கி.மீ.,தூரம்,பயணிகள் மற்றும் சரக்கு ரயில் போக்குவரத்தை மேற்கொண்டு வருகி றது. நாள்தோறும், 19,710 ரயில்கள், பல்வேறு மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன. இவற்றில், 2.30 கோடி பேர் பயணிக் கின்றனர்.
ரயில்வேயில் விளம்பரம் செய்யப்படும் ஒரு பொருள், குறிப்பிட்ட மண்டலங்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் பரவலாக மக்களை சென்றடைகிறது.இதனால், ஏராளமான நிறுவனங்கள், ரயில்வேயில் விளம்பரம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.கடந்த, 2007-08ம் நிதியாண்டில், விளம்பர உரிமங்களை வழங்கியதன் மூலம், இந்திய ரயில் வே, 153.24 கோடி ரூபாய்ஈட்டி உள்ளது. இது, 2008-09ம் நிதிஆண்டில், 157.48 கோடி ரூபாயாகவும்,2009- 10ம் நிதியாண்டில், 170 கோடி ரூபாயாகவும் உயர்ந்து உள்ளது.
2010-11ம் நிதியாண்டில், விளம்பர வருவாய்மூலம்,1,000 கோடி ரூபாய்திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 187.70 கோடி ரூபாய்மட்டுமே திரட்டப்பட்டது.இந்த மிகப் பெரிய வித்தியாசத்தை தான், சி.ஏ.ஜி., ”ட்டிக் காட்டி, ரயில்வே வாரியம், முறையாக ஆய்வு செய்யாமல், வருவாய்இலக்கு நிர்ணயித்து உள்ளதாக தெரிவித்து உள்ளது.கடந்த, 2011-12ம் நிதியாண்டில், இந்திய ரயில்வே, விளம்பர உரிமம் மூலம், 195.14 கோடி ரூபாய் ஈட்டி யுள்ளது.கடந்த, 2009-12ம் நிதியாண்டுகளில், ராஜதானி எக்ஸ்பிரஸ், சதாப்தி, மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் உள் ளிட்ட, 74 ரயில்களில் விளம்பரம் செய்ய உரிமம் வழங்கிய வகையில், ரயில்வேக்கு, 24.49 கோடி ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது.
டிக்கெட்:இதே காலத்தில், 112 புறநகர் ரயில்களில் செய்யப்பட்ட விளம்பரம் மூலம், 11.62 கோடி ரூபாய்கிடைத்து உள்ளது.ரயில்வே விளம்பர வருவாயில், ரயில் நிலையங்களின் பங்களிப்பு, 85 சதவீதமாக உள்ளது. இது, ரயில்களில், 11 சதவீதமாகவும், டிக்கெட்டுகள், பயணியர் அட்டவணை மற்றும் ரயில்வே கடவுப் பாதை ஆகிய வற்றில், 4 சதவீதம் என்ற அளவிலும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)