பதிவு செய்த நாள்
17 ஆக2013
00:28
மும்பை:நாட்டின் பொருளாதார மந்த நிலையால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பல இந்திய நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைந்துள்ளது. தேவைப் பாடு குறைந்து போனதன் காரணமாகவும், நிறுவனங்களின் முதலீடு மற்றும் மூலதனச் செலவினங்கள் சரிவு அடைந்து போயுள்ளது.
சேவை துறை:இதனால், ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில், தயாரிப்பு மற்றும் சேவை துறைகளைச் சேர்ந்த, 636 நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடும் போது, 4.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்து உள்ளது.இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத சரிவு நிலையாகும் என, "கிரிசில்' ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில், பல நுகர்பொருள் துறை நிறுவனங்களின், மூலப் பொருட்களுக்கான செலவினம் அதிகரித்துள்ளதுடன், வட்டி செலவினமும், சராசரியாக, 20 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. ஆனால், இத்துறை நிறுவனங்கள், அவற்றின் செலவின உயர்வை, நுகர்வோர் மீது சுமத்த முடியாத நிலையில் உள்ளன.
நிகர லாபம்:இதனால், இந்நிறுவனங்களின் நிகர லாபம், கணக்கீட்டு காலாண்டில், 7.9 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவடைந்து உள்ளது. ஆக, கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட மொத்த நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்து போயுள்ளதாக, "கிரிசில்' நிறுவனத்தின் ஆய்வாளர் தெரிவித்தார்.
குறிப்பாக, எண்ணெய் நிறுவனங்கள் தவிர்த்த, பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி, மிகவும் சரிவடைந்துள்ளது.மருந்து, தொலை தொடர்பு, நுகர் பொருட்கள், மின்சாரம், ஊடகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மொத்த லாப வரம்பு, மிகவும் குறைந்து உள்ளதாக "கிரிசில்' நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.அதேசமயம், நடப்பு நிதிஆண்டின் முதல் காலாண்டில், நடுத்தர நிறுவனங் களின் நிதி நிலை, நல்ல அளவில் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதர வருவாய்:நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பல இந்திய நிறுவனங்களின், வருவாய் மற்றும் லாப வரம்பு சரிவடைந்துள்ள நிலையில், அவற்றின் இதர வருவாய் சிறப்பான அளவில் உயர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.குறிப்பாக,டாட்டா மோட்டார்ஸ், பெல், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ்,லூப்பின் ஆகிய நிறுவனங்களின் இதர வருவாய் சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்களின் ஒட்டு மொத்த வருவாய், கணக்கீட்டு காலாண்டில் சிறப்பாக உயர்ந்துள்ளது.
கணக்கீட்டு காலாண்டில், லூப்பின் நிறுவனத்தின் இதர வருவாய், 169 சதவீதம் அதிகரித்து, 157 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இதர வருவாய், 262 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,621 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதற்கு, இந்நிறுவனத்தின், ஜாகுவார் லேண்ட் ரோவர் வாயிலான டிவிடெண்டு வருவாய் (15 கோடி பவுண்ட்) அதிகரித்ததே காரணமாகும்.
பொறியியல்:பெல் நிறுவனத்தின் இதர வருவாய், 47 சதவீதம் அதிகரித்து, 538 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.இதே போன்று,எண்ணெய், எரிவாயு, வங்கி, பொறியியல் போன்ற துறைகளில் உள்ள ஒரு சில நிறுவனங்களின் இதர வருவாய் வளர்ச்சி நல்ல அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.வங்கி துறையில், கோட்டக் மகிந்திராவின் இதர வருவாய், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 91.7 சதவீதம் அதிகரித்து, 241 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|