பதிவு செய்த நாள்
17 ஆக2013
12:55
புதுடில்லி : 1991-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படாது என பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரூபாயின் மதிப்பு அதலபாதளத்தில் சென்று கொண்டு இருப்பதால் நாட்டின் பொருளாதாரத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இதனால் 91-ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மீண்டும் இந்தியாவில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவி வருகிறது.
இந்நிலையில் டில்லியில் தனது இல்லத்தில் ரிசர்வ் வங்கி தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மன்மோகன் சிங், இந்திய பொருளாதாரத்தில் உலகமயமாக்கல் கொள்கை திரும்ப பெறப்பட மாட்டாது என்றார். மேலும் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடி விரைவில் சரியாகும் என்றும், 91-ல் ஏற்பட்டது போன்ற சூழல் உருவாகாது என்றும், அன்றைய காலகட்டத்தில் அந்நிய செலவாணி விகிதம் ஒரே நிலையாக இருந்தது, தற்போது இது சந்தைகளின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுவதால் அந்த சூழல் எழாது. ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்திவிட்டாலே இது சரியாகிவிடும் என்றார்.
மேலும் தங்கம் அதிகளவு இறக்குமதி செய்யப்பட்டு வருவது மற்றும் ஆக்கப்பூர்வமற்ற சொத்துக்களில் அதிகளவு முதலீடு செய்வதும் தான் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என்றும் அதை குறைத்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறையும் என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|