பதிவு செய்த நாள்
19 ஆக2013
04:05
புதுடில்லி:நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி, சென்ற ஜூலையில், 20.50கோடி டாலராக (1,210கோடி ரூபா#) வளர்ச்சி கண்டு உள்ளது. இது, கடந்தாண்டு இதே மாதத்தில், 18.59கோடி டாலராக (1,096கோடி ரூபாய்) இருந்தது.
அமெரிக்கா:ஆக மதிப்பீட்டு மாதத்தில், இந்தியாவின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி, 10 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என, øவினை பொருட்கள் ஏற்றுமதிமேம்பாட்டு கவுன்சில் (இ.பி.சி.எச்.,) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், அமெரிக்கா, சீனா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளில், இந்திய கைவினை பொருட்களுக்கானதேவை அதிகரித்து வருகிறது.
அதேசமயம், ஐரோப்பிய நாடுகளில், இதற்கானதேவை இன்னும் மந்தகதியிலேயே உள்ளது என, இ.பி.சி.எச்.,யின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் குமார் தெரிவித்தார்.
ஆப்ரிக்கா:நாட்டின் ஒட்டுமொத்த கைவினை பொருட்கள் ஏற்றுமதியில், ஐரோப்பா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்பு, 60 சதவீதம் என்ற அளவில் உள்ளது.பாரம்பரிய சந்தைகள் தவிர்த்து, புதிய நாடுகளான சீனா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்ரிக்க நாடுகளின் பக்கமும் ஏற்றுமதியாளர்கள் கவனம் செலுத்த துவங்கிஉள்ளனர்.
இதையடுத்து, இந்நாடுகளிலும், இந்திய கைவினை பொருட்கள் பிரபலமாகி, ஏற்றுமதிக்கானதேவை உயர்ந்து வருகிறது. வரும் மாதங்களிலும், இதே நிலை தொடரும் என, இ.பி.சி.எச்.,யின் முன்னாள் தலைவர் ரவி பசி தெரிவித்தார்.சென்ற ஜூலையில், ஒட்டுமொத்த கைவினை பொருட்கள் ஏற்றுமதியில், மரச்சாமான்கள் ஏற்றுமதி மிகவும் அதிகளவாக, 28 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
இதையடுத்து, கலைவேலைப்பாடுகளுடன் கூடிய சால்வைகள் (25.56 சதவீதம்), கவரிங் நகைகள் (25.36 சதவீதம்) ஆகியவை உள்ளன.ஜோத்பூர் :நடப்பாண்டின், ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், நாட்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதி, 12 சதவீதம் வளர்ச்சி கண்டு, 86.90கோடி டாலராக அதிகரித்து உள்ளது.உள்நாட்டில், மொரதாபாத், ஜெய்ப்பூர், ஷரன்பூர் மற்றும்ஜோத்பூர் ஆகிய நகரங்கள், கைவினை பொருட்கள் உற்பத்தி செய்வதில் முக்கிய நகரங்களாக திகழ்கின்றன. இத்துறையில், 10 லட்சம்பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|