தனியார் பங்கு முதலீடு 233 கோடி டாலராக வளர்ச்சிதனியார் பங்கு முதலீடு 233 கோடி டாலராக வளர்ச்சி ... ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால்... வீட்டு உபயோகம், மின்னணுசாதனங்கள் விலை உயர்கிறது ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால்... வீட்டு உபயோகம், மின்னணுசாதனங்கள் விலை ... ...
இந்திய பங்குசந்தைகளில்எப்.ஐ.ஐ.,க்கள் 206 கோடி டாலர் முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
00:38

புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), இந்திய பங்குச்சந்தைகளில், மேற்கொண்ட முதலீடு, சென்ற ஜூலை மாதம் வரையிலுமான காலத்தில், 206 கோடி டாலராக (12.93 லட்சம் கோடி ரூபாய்)சரிவடைந்துள்ளது. இது, கடந்த எட்டு மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும் என, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்துள்ளது.
கடன் பத்திரங்கள்:அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணங்கள் உள்ளிட்ட, பல்வேறு வழிமுறைகளில், பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.குறிப்பாக, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, நடப்பாண்டு ஜூலை வரையிலுமான காலத்தில், 44 ஆயிரம் கோடி ரூபாய்குறைந்து, 12.93 லட்சம் கோடியாகசரிவடைந்துள்ளது.
இது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில், 13.35 லட்சம் கோடி ரூபாய்என்ற அளவில் இருந்தது. அதன் பின், தற்போது தான், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு இந்த அளவிற்கு குறைந்து உள்ளது.
எப்.ஐ.ஐ.,க்கள் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொண்ட முதலீடு, சென்ற ஜூலை மாதத்தில், 1.48 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. இது, கடந்த, 11 மாதங்களுக்கு பின், சென்ற ஜூன் மாதத்தில், 1.47 லட்சம் கோடி ரூபாய்என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.இதே மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணங்கள் மூலம், கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 99,763 கோடியிலிருந்து, 94,814 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பங்கேற்பு ஆவணங்கள்:வெளிநாடுகளில் வசிக்கும் அதிக சொத்து கொண்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்தும் வகையில், எப்.ஐ.ஐ.,க்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக முதலீடு மேற்கொள்கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)