பதிவு செய்த நாள்
21 ஆக2013
00:38
புதுடில்லி:அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.,), இந்திய பங்குச்சந்தைகளில், மேற்கொண்ட முதலீடு, சென்ற ஜூலை மாதம் வரையிலுமான காலத்தில், 206 கோடி டாலராக (12.93 லட்சம் கோடி ரூபாய்)சரிவடைந்துள்ளது. இது, கடந்த எட்டு மாதங்களில் காணப்படாத குறைந்தபட்ச அளவாகும் என, பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, "செபி' தெரிவித்துள்ளது.
கடன் பத்திரங்கள்:அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணங்கள் உள்ளிட்ட, பல்வேறு வழிமுறைகளில், பங்குகள் மற்றும் கடன்பத்திரங்களில் முதலீடு செய்கின்றன.குறிப்பாக, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் மேற்கொண்ட முதலீடு, நடப்பாண்டு ஜூலை வரையிலுமான காலத்தில், 44 ஆயிரம் கோடி ரூபாய்குறைந்து, 12.93 லட்சம் கோடியாகசரிவடைந்துள்ளது.
இது, கடந்தாண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில், 13.35 லட்சம் கோடி ரூபாய்என்ற அளவில் இருந்தது. அதன் பின், தற்போது தான், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொள்ளும் முதலீடு இந்த அளவிற்கு குறைந்து உள்ளது.
எப்.ஐ.ஐ.,க்கள் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக மேற்கொண்ட முதலீடு, சென்ற ஜூலை மாதத்தில், 1.48 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது. இது, கடந்த, 11 மாதங்களுக்கு பின், சென்ற ஜூன் மாதத்தில், 1.47 லட்சம் கோடி ரூபாய்என்ற அளவில் குறைந்து காணப்பட்டது.இதே மாதங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், பங்கேற்பு ஆவணங்கள் மூலம், கடன்பத்திரங்களில் மேற்கொண்ட முதலீடு, 99,763 கோடியிலிருந்து, 94,814 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
பங்கேற்பு ஆவணங்கள்:வெளிநாடுகளில் வசிக்கும் அதிக சொத்து கொண்ட தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்தும் வகையில், எப்.ஐ.ஐ.,க்கள் வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக முதலீடு மேற்கொள்கின்றன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|