இந்திய பங்குசந்தைகளில்எப்.ஐ.ஐ.,க்கள் 206 கோடி டாலர்  முதலீடுஇந்திய பங்குசந்தைகளில்எப்.ஐ.ஐ.,க்கள் 206 கோடி டாலர் முதலீடு ... ரூபாயின் மதிப்பு மீண்டும் ஒரு வரலாற்று சரிவு - ரூ.64.44 ரூபாயின் மதிப்பு மீண்டும் ஒரு வரலாற்று சரிவு - ரூ.64.44 ...
ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால்... வீட்டு உபயோகம், மின்னணுசாதனங்கள் விலை உயர்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஆக
2013
00:44

கடந்த ஒரு சில வாரங்களாக, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சியைசந்தித்து வருகிறது. இதையடுத்து, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணுசாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன. ஒரு சில நிறுவனங்கள், அவற்றின் விலையை உயர்த்தியுள்ளன.நடப்பாண்டு மே மாதம் முதல், இது வரையிலுமாக, டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்பு, 15சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனால், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணுசாதனங்கள் தயாரிப்பிற்கு தேவையான மூலப் பொருட்களுக்கான இறக்குமதி செலவினம், பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இவற்றின் விலையை உயர்த்துவதை தவிர, வேறு வழி இல்லையென, இத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
செலவிடும் வருவாய்:அதேசமயம், பொருளாதார சுணக்க நிலையால், மக்களின் செலவிடும் வருவாய்குறைந்து உள்ளது. இதனால், மேற்கண்ட பொருட்களுக்கான தேவைப்பாடும் மிகவும்சரிவடைந்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில், ஓணம், தசரா மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வர உள்ளன. இச்சூழ்நிலையில், இவற்றின் விலையை உயர்த்தினால், அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும்.பொதுவாக, வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மின்னணுசாதனங்கள் விற்பனையில், 25-30சதவீதம் மேற்கண்ட பண்டிகை காலங்களில்தான் விற்பனையாகின்றன என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
இது குறித்து, கோத்ரெஜ் அப்ளையன்சஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ஜார்ஜ் மென்னிஸ் கூறியதாவது:டாலருக்கு எதிரான ரூபாய்மதிப்புசரிவடைந்துள்ளதால், நிறுவனத்தின் தயாரிப்பு பொருட் களின் விலையை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை. இம்மாத இறுதிக்குள், நிறுவனத்தின் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை, 3சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நுகர்வோர்சாதனங்கள்:ஏர்கண்டிஷனர்கள், ரெப்ரிஜிரேட்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும், புளூஸ்டார் நிறுவனத்தின் தலைவர், பீ.தியாகராஜன் கூறுகையில், ரூபாயின் மதிப்பு, 63ஐ தாண்டியுள்ளது. இந்நிலையில், தயாரிப்பு பொருட்களின் விலையை, 3சதவீத அளவிற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு அடுத்த ஒரு வாரத்திற்குள் இருக்கும். விலை உயர்வு தவிர்க்க முடியாததாகும்,'' என்றார்.
நுகர்வோர்சாதனங்கள் மற்றும் மின்னணுசாதனங்கள் தயாரிப்பில் அதிகளவிலான, உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ரூபாய்மதிப்புசரிவடைந்துள்ளதால், இவற்றிற்கான இறக்குமதி செலவினம் பன்மடங்கு உயர்ந்து உள்ளது. இதன் காரணமாகவே, தயாரிப்பு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிலைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன.குறிப்பாக, "டிவி', வாஷிங்மெஷின், "ஏசி'சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், குறிப்பிட்ட சில உதிரிபாகங்களை மட்டும் இறக்குமதி செய்து கொள்கின்றன, அதேசமயம், டிஜிட்டல் கேமரா, மடிக் கணினி, மொபைல் போன், மைக்ரோ வேவ் ஓவன்கள் போன்றவை முழு அளவில், இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால், இந்நிறுவனங்களின் இறக்குமதி செலவினம், மற்ற நிறுவனங்களை விட, மிகவும் அதிகமாக உள்ளது.
மொபைல் போன் துறையில் ஈடுபட்டு வரும், மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்பன் ஆகிய நிறுவனங்கள் அவற்றின் தயாரிப்பு பொருட்களின் விலையை, 5சதவீதம் அளவிற்கு உயர்த்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரும், வர்த்தக இயக்குனருமான விகாஷ் ஜெயின் கூறுகையில், "நிறுவனம், கடந்த ஜூலை மாதத்தில்தான், பொருட்களின் விலையை, 7சதவீத அளவிற்கு உயர்த்தியது. இந்நிலையில், மீண்டும், விலை உயர்த்துவது குறித்து, ஆலோசித்து வருகிறோம்' என்றார்.
செயல்பாடு:பானாசோனிக் நிறுவனத்தின் மண்டல துணை நிர்வாக இயக்குனர்,சுரேஷ் பண்டி இது குறித்து கூறியதாவது:
ரூபாயின் மதிப்பு தொடர்ந்துசரிவடைந்து வருகிறது. இது, நிறுவனத்தின் செயல்பாட்டை மிகவும் பாதிப்பதாக உள்ளது. இந்நிலையில், நிறுவனம், கடந்த ஒரு சில மாதங்களாக, பொருட்களின் விலையை உயர்த்தாமலேயே உள்ளது. ஆனால், இது, தொடர்ந்துசாத்தியப்படாது. எனவே, அடுத்த ஒரு சில வாரங்களில், வீட்டு உபயோக பொருட்களின் விலையை, 3-5சதவீதம் வரை உயர்த்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.கொரியாவைச் சேர்ந்தசாம்சங் மற்றும் எல்.ஜி ஆகிய நிறுவனங்கள், அவற்றின்சாதனங்களின் விலையை உயர்த்துவது குறித்து முடிவு எடுக்கவில்லை என, தெரிவித்துள்ளன.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)