பதிவு செய்த நாள்
22 ஆக2013
17:25
புதுடில்லி: இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு உலக பொருளாதார சூழலே காரணம் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் அதலபாதளத்தில் சென்று கொண்டு இருக்கிறது. குறிப்பாக இன்று ரூ.65-ஐ எட்டியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார் நிதியமைச்சர் சிதம்பரம். அவர் பேசுகையில், ரூபாய் மதிப்பு சரிவிற்கு சர்வதேச பொருளாதார சூழல்கள் தான் காரணம். இதனை தடுக்க மத்திய அரசு தேவையான நடவடிக்கையினை எடுத்து வருகிறது. அதனால் முதலீட்டாளர்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை.
நாட்டின் வளர்ச்சிக்கு கடுமையான சவால்கள் காத்திருக்கின்றன. இந்தியாவை போன்று மற்ற வளரும் நாடுகளும் இதே பிரச்னையை எதிர் கொண்டுள்ளன. ஆனால் மற்ற நாடுகளை காட்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் நன்றாக உள்ளது. ஏற்ற இறக்கங்களை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது முதல் காலாண்டில் உற்பத்தி சரிந்து காணப்படுகிறது. இனி வரும் காலத்தில் இது அதிகரிக்கும் அதன்மூலம் எதிர்காலத்தில் முதலீடு அதிகரிக்கும் என்றார். மேலும் தற்போது நாட்டின் அந்நிய முதலீடும், ஏற்றுமதியும் உயர்ந்து வருகிறது. கடன்களும் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|