சர்வதேச அரசியல் பிரச்னைகளால்குன்னூரில் தேயிலை வர்த்தகம் சுணக்கம்சர்வதேச அரசியல் பிரச்னைகளால்குன்னூரில் தேயிலை வர்த்தகம் சுணக்கம் ... புதிய எரிவாயு வளம்ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு புதிய எரிவாயு வளம்ரிலையன்ஸ் கண்டுபிடிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஆறு பொது துறை வங்கிகளுக்குரூ.6.50 கோடி அபராதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2013
05:28

மும்பை:விதிமுறைகளை பின்பற்றத் தவறிய, பொதுத்துறையை சேர்ந்த, ஆறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, 6.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. "வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற விதிமுறையின் கீழ், வங்கிகள், அவற்றின் வாடிக்கையாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரு சில வங்கிகள், இந்த விதிமுறையை முழுமையாக பின்பற்றுவதில்லை என்பது, @காப்ரா போஸ்ட் இணையதளம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், பல வங்கிகள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, புகாருக்கு உள்ளான வங்கிகளின் செயல்பாடுகளை ஆராய, ரிசர்வ் வங்கி, குழு ஒன்றை அமைத்தது.
இக்குழுவின் ஆய்வில், 32 வங்கிகள், விதிமுறைகளை மீறியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, விதிமுறைகளை பின்பற்றாத, ஆறு பொதுத்துறை வங்கிகளுக்கு, 6.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தேனா வங்கிக்கு, 2 கோடி ரூபாய், கார்ப்பரேஷன் வங்கிக்கு, 1.50 கோடி ரூபாய், ஐ.டீ.பீ.ஐ., வங்கி மற்றும் இந்தியன் வங்கிக்கு, தலா 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், @பங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் அலகாபாத் வங்கிக்கு, தலா, 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன், இதே போன்று, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டீ.எப்.சி., பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றுக்கும், ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)