பதிவு செய்த நாள்
26 ஆக2013
05:28
மும்பை:விதிமுறைகளை பின்பற்றத் தவறிய, பொதுத்துறையை சேர்ந்த, ஆறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி, 6.50 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. "வாடிக்கையாளரை தெரிந்து கொள்ளுங்கள்' என்ற விதிமுறையின் கீழ், வங்கிகள், அவற்றின் வாடிக்கையாளர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரு சில வங்கிகள், இந்த விதிமுறையை முழுமையாக பின்பற்றுவதில்லை என்பது, @காப்ரா போஸ்ட் இணையதளம் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. மேலும், பல வங்கிகள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தடுப்பு விதிமுறைகளை மீறியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, புகாருக்கு உள்ளான வங்கிகளின் செயல்பாடுகளை ஆராய, ரிசர்வ் வங்கி, குழு ஒன்றை அமைத்தது.
இக்குழுவின் ஆய்வில், 32 வங்கிகள், விதிமுறைகளை மீறியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, இக்குழுவின் பரிந்துரையை ஏற்று, விதிமுறைகளை பின்பற்றாத, ஆறு பொதுத்துறை வங்கிகளுக்கு, 6.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதன்படி, தேனா வங்கிக்கு, 2 கோடி ரூபாய், கார்ப்பரேஷன் வங்கிக்கு, 1.50 கோடி ரூபாய், ஐ.டீ.பீ.ஐ., வங்கி மற்றும் இந்தியன் வங்கிக்கு, தலா 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், @பங்க் ஆப் மகாராஷ்டிரா மற்றும் அலகாபாத் வங்கிக்கு, தலா, 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன், இதே போன்று, ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க், எச்.டீ.எப்.சி., பேங்க், ஆக்சிஸ் பேங்க் ஆகியவற்றுக்கும், ரிசர்வ் வங்கி அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|