பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:05
புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் பருவத்தில், நாட்டின் வேளாண் உற்பத்தி, மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என, எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக அதிகரிக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர், சி.ரங்கராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:நடப்பாண்டில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில், சாதாரண அளவை காட்டிலும், கூடுதலாக 14 சதவீதம் மழை பெய்துள்ளது. இதையடுத்து, நடப்பு கரீப் பருவத்தில், நாடுதழுவிய அளவில் சாகுபடி பரப்பளவும் உயர்ந்து உள்ளது.
இதன் காரணமாக, நடப்பு நிதிஆண்டில், வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த நிதிஆண்டை விட, மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 1.9 சதவீதம் என்ற அளவிலிருந்து, 4.5 - 5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சியும், கடந்தாண்டை விட, உயர்ந்து, 1.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதுபோன்ற காரணங்களால், நடப்பு 2013-14ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும். கடந்த 2012-13ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, முந்தைய 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவு அடைந்து இருந்தது. இவ்வாறு, ரங்கராஜன் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|