ரூபாய் மதிப்பு சரிவு: சிதம்பரம் பதில்ரூபாய் மதிப்பு சரிவு: சிதம்பரம் பதில் ... ரூ.1.83 லட்சம் கோடி மதிப்பிலானகட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி ரூ.1.83 லட்சம் கோடி மதிப்பிலானகட்டமைப்பு திட்டங்களுக்கு அனுமதி ...
"பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக உயரும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
00:05

புதுடில்லி:நடப்பு 2013 - 14ம் பருவத்தில், நாட்டின் வேளாண் உற்பத்தி, மதிப்பீட்டை விட அதிகரிக்கும் என, எதிர் பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக அதிகரிக்கும் என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர், சி.ரங்கராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:நடப்பாண்டில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில், சாதாரண அளவை காட்டிலும், கூடுதலாக 14 சதவீதம் மழை பெய்துள்ளது. இதையடுத்து, நடப்பு கரீப் பருவத்தில், நாடுதழுவிய அளவில் சாகுபடி பரப்பளவும் உயர்ந்து உள்ளது.
இதன் காரணமாக, நடப்பு நிதிஆண்டில், வேளாண் துறையின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த நிதிஆண்டை விட, மூன்று மடங்கிற்கும் மேல் அதிகரித்து, 1.9 சதவீதம் என்ற அளவிலிருந்து, 4.5 - 5 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப் படுகிறது. மேலும், தயாரிப்புத் துறையின் உற்பத்தி வளர்ச்சியும், கடந்தாண்டை விட, உயர்ந்து, 1.2 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
இதுபோன்ற காரணங்களால், நடப்பு 2013-14ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும். கடந்த 2012-13ம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி, முந்தைய 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 5 சதவீதம் என்ற அளவில் மிகவும் சரிவு அடைந்து இருந்தது. இவ்வாறு, ரங்கராஜன் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)