பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:08
சென்னை:நேற்று, ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு, 1,152 ரூபாய் வீழ்ச்சி கண்டு, 23,208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.சர்வதேச அளவில் தங்கம் விலை உயர்வு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் சரிவு நிலை போன்ற காரணங்களால், தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து வந்தது.
இந்நிலையில்,முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்பனை செய்து வருவதை அடுத்து,இதன் விலை, நேற்று,அதிரடியாக வீழ்ச்சி கண்டது.சென்னையில்,நேற்று முன்தினம்,22 காரட் ஆபரண தங்கம்,1 கிராம்,3,045 ரூபாய்க் கும், 1 சவரன், 24,360 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 32,565 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 144 ரூபாய் குறைந்து, 2,901 ரூபாய்க்கு விற்பனையானது. சவர னுக்கு,1,152 ரூபாய் வீழ்ச்சி கண்டு,23,208 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.10 கிராம் சுத்த தங்கம், 1,535 ரூபாய் சரிவடைந்து, 31,030 ரூபாய்க்கு விற்பனையானது.அதேசமயம், 1 கிராம் வெள்ளி, 61.60 ரூபாயாகவும், 1 கிலோ பார் வெள்ளி, 57,630 ரூபாயாகவும் அதிகரித்திருந்தது.
இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறுகையில், ""முதலீட்டாளர்கள் தங்களிடம் உள்ள தங்கத்தை மறு சுழற்சிக்காக, அதிக அளவில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், தங்கம் விலை குறைந்துள்ளது,'' என்றார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|