பதிவு செய்த நாள்
28 ஆக2013
00:13
மும்பை:டன்லப் இந்தியா, கோடன்ஸ் ரீடெய்ல் இந்தியா உள்ளிட்ட, 15 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்திற்கு, செப்., 18ம் தேதி முதல், தடை விதிக்கப்படும் என, மும்பை பங்குச் சந்தை தெரிவித்து உள்ளது.
விதிமுறைகள்:கடந்த மார்ச் வரையிலான காலாண்டில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பின்பற்ற வேண்டிய, விதிமுறைகளை பின்பற்றாத காரணத்தால், அவற்றின் பங்கு வர்த்தகத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, டன்லப் இந்தியா, கோடன்ஸ் ரீடெய்ல், அகுரேட் டிரான்ஸ்பார்மர்ஸ், அசாஹி இன்பிராஸ்ட்ரக்சர் அண்டு புராஜெக்ட்ஸ், பாப்னா ஸ்பின்னிங் மில்ஸ் அண்டு எக்ஸ்போர்ட்ஸ், கான்கரன்ட் இன்பிராஸ்ட்ரக்சர் ஆகிய நிறுவனங் களின் பங்கு களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவை தவிர, கன்சன் இன்டர்நேஷனல், ஓசியன் இண்டஸ்ட்ரீஸ், போலார் பார்மா இந்தியா, சாக் ஆர்.ஆர். இன்பிரா, சன்குயின் மீடியா,டெலிகானார் குளோபல், விகாஷ் மெட்டல் அண்டு பவர்,ராஜீவ்லோச்சன் ஆயில் எக்ஸ்ட்ராக்ஷன், வெல் பேக் பேப்பர்ஸ் அண்டு கன்டேய்னர்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் மீதும், செப்., 15ம் தேதி முதல் பங்கு வர்த்தகம் நடைபெறாது.
அனுமதி:இந்த நிறுவனங்கள், செப்.,10ம் தேதிக்குள், விதிமுறைகளை பூர்த்தி செய்யும் பட்சத்தில், ஐந்து நாட்கள், அதா வது, செப்., 24ம் தேதி வரை, அவற்றின் பங்குகள் மீதான வர்த்தகம் நிறுத்தி வைக்கப்படும். அதன் பின்னர் வழக்கம் போல் பங்கு வர்த்தகம் நடைபெற அனுமதிக்கப்படும் என, பங்குச் சந்தையின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|