நடப்பு கணக்கு பற்றாக்குறை உயரும் நாட்டின் இரும்பு தாது இறக்குமதி அதிகரிப்புநடப்பு கணக்கு பற்றாக்குறை உயரும் நாட்டின் இரும்பு தாது இறக்குமதி ... ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்தது ...
ரூ.68.80 - தொடர்ந்து அதலபாதளத்தில் ரூபாயின் மதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஆக
2013
09:59

மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து அதலபாதளத்தில் சென்று கொண்டு இருக்கிறது. இன்று(ஆகஸ்ட் 28ம் தேதி, புதன்கிழமை) உச்சமாக ரூ.68-ஐ தாண்டி இருக்கிறது.

சில மாதங்களாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, வீழ்ச்சி கண்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்த, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளன. ஆனாலும், சரிவு நிலையை தடுத்து நிறுத்த முடியவில்லை. நேற்று ரூ.66-ஐ தாண்டி இருந்த நிலையில் இன்று மேலும் ஒரு உச்சநிலை சரிவை சந்தித்து இருக்கிறது. வர்த்தகநேர துவக்கத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 118 காசுகள் சரிந்து ரூ.67.42-ஆக சரிந்தது. தொடர்ந்து சரிய தொடங்கிய ரூபாயின் மதிப்பு 10.45 மணியளவில் ரூ.68.75-ஆக இருந்தது. பின்னர் சற்று மீண்டு 3 மணியளவில் ரூ.67.77-ஆக இருந்தது. தொடர்ந்து வர்த்தகநேர முடிவில் ரூ.68.80-ஆக முடிந்தது.

பொறுமை காக்க வேண்டும் - சிதம்பரம்

ரூபாய் வீழ்ச்சி தொடர்பாக நேற்று பார்லிமென்ட்டில் பேசிய நிதியமைச்சர் சிதம்பரம்... அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட, பொருளாதார நெருக்கடியால், அந்நாடுகளுக்கான ஏற்றுமதி குறைந்ததுடன், இறக்குமதியும் அதிகரித்தது. அதனால், கடந்த நிதியாண்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4.8 சதவீதமாக அதிகரித்தது.கடந்த, 2012 ஆகஸ்ட் முதல், 2013 மே வரை, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, நிலையாகவே இருந்தது. அதன்பின், நடப்பாண்டு, மே, 22ம் தேதி முதல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணத் துவங்கியது.இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமின்றி, வளர்ச்சி கண்டு வரும், பல நாடுகளின் செலாவணி மதிப்பும், சரிவடைந்து வருகிறது.எனவே, ரூபாய் மதிப்பு சரிவடைவதை கண்டு, நாம் அச்சப்பட தேவையில்லை. பொருளாதார வளர்ச்சி, நன்கு அமையும் நிலையில், ரூபாயின் மதிப்பு உயர வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், நாம் பொறுமை காக்க வேண்டியுள்ளது. ஆனால், ரூபாயின் மதிப்பு நிச்சயமாக உயரத் துவங்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)