அரசு கொள்முதல் அறிவிப்பால்பருப்பு விலை மேலும் உயரும்அரசு கொள்முதல் அறிவிப்பால்பருப்பு விலை மேலும் உயரும் ... உணவு பாதுகாப்பு திட்டத்தால் பொருளாதாரம் பாதிப்படையும் தர குறியீட்டு நிறுவனம் "மூடீஸ்' கருத்து உணவு பாதுகாப்பு திட்டத்தால் பொருளாதாரம் பாதிப்படையும் தர குறியீட்டு ... ...
பீப்பாய் கச்சா எண்ணெய் விலை ரூ.7,000 ஆக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2013
01:35

புதுடில்லி:இறக்குமதி செய்யப்படும், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, ஆகஸ்ட் 26ம் தேதி நிலவரப்படி, ரூபாய் மதிப்பு அடிப்படையில், 7,000ஆக அதிகரித்துள்ளது. இது, நடப்பாண்டு ஏப்ரல் மாதம், 5,500 ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி செலவு:டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின்சரிவு நிலை மற்றும் சர்வதேசசந்தையில், கச்சா எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால், கடந்த ஐந்து மாதங்களில், இறக்குமதி செய்யப்படும், கச்சா எண்ணெயின் விலை, பீப்பாய்க்கு, 1,500 ரூபாய் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட், 26ம் தேதி வரையிலுமாக, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, 19சதவீதத்திற்கும் அதிகமாகசரிவடைந்துள்ளது. இதே காலத்தில்,சர்வதேச சந்தையில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 7சதவீதம் உயர்ந்துள்ளது.
நாட்டின் கச்சா எண்ணெய்க்கான தேவையில், 80சதவீதம் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், கச்சா எண்ணெய்க்கான இறக்குமதி செலவினம், பன்மடங்கு அதிகரித்துள்ளதையடுத்து, நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பதுடன், எண்ணெய்சந்தைப்படுத்தும், மூன்று பொதுத் துறை நிறுவனங்களுக்கு, அதிக அளவில் வருவாய் இழப்பும் ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயை, 5,665 ரூபாய் என்ற அளவில் வாங்கிய நிலையில், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 27,638 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை, 7,000 ரூபாயாக அதிகரித்துள்ள நிலையில், நடப்பு முழு நிதியாண்டில், இந்நிறுவனங்களுக்கு, 1.30 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.
அடக்க விலைக்கும் குறைவாக, டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் போன்றவற்றை விற்பதால் ஏற்படும், வருவாய் இழப்பை ஈடு செய்ய, நடப்பு, 2013 - 14ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், 65 ஆயிரம் கோடி ரூபாய் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வருவாய் இழப்பு:இதில்,கடந்த நிதியாண்டிற்கு வழங்க வேண்டிய, 18 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை தொகையும் அடங்கும்.இச்சூழ்நிலையில், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், எண்ணெய் நிறுவனங்களின் வருவாய் இழப்பு அதிகரிக்கும் என்பதுடன், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)