பதிவு செய்த நாள்
02 செப்2013
00:32
புதுடில்லி:இந்தியாவில், பயன்படுத்தப்பட்ட பழைய கார்கள் வாங்குவது அதிகரித்து வருவதாக, ஜே.டீ.பவர் ஏஷியா நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய கார் வாங்குவோர், அதற்கு முன்பாக, பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கவே அதிகம் விரும்புகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளில், இத்தகையோரின் எண்ணிக்கை, 10 சதவீதம் உயர்ந்துள்ளது.நடப்பாண்டில், புதிய வாகனங்களை வாங்கியோரில், 13 சதவீதம் பேர், பழைய வாகனங்களை வாங்குவது குறித்து ஆலோசித்ததாக, விற்பனையில் திருப்தி குறித்த குறியீடு தொடர்பான ஆய்வில் தெரியவந்துள்ளது.
கார் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் துணை நிறுவனங்கள் மூலம், பயன்படுத்தப்பட்ட வாகனங்களின் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றன. நுகர்வோரின் நம்பிக்கைக்கு பாத்திரமான இந்நிறுவனங்கள் விற்பனை செய்யும் பயன்படுத்தப்பட்ட கார்கள், பழுது நீக்கப்பட்டு, சிறந்த பராமரிப்புடன், ஓராண்டு உத்தரவாதத்துடன் கிடைக்கின்றன.மேலும், இவற்றின் விலையும் குறைவாக இருப்பதால், தற்போது, பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை அதிகரித்து வருவதாக, இத்துறையை சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|