பதிவு செய்த நாள்
02 செப்2013
09:58
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளான இன்று ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 புள்ளிகள் அதிகரித்து 18690.03 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து 5480.25 புள்ளிகளோடு காணப் பட்டது. வர்த்தக நேர தொடக்கத்தின் போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.66.09 ஆக இருந்தது. பங்கு வர்த்தகம், மாதத்தின்இறுதி வர்த்தக தினமான வெள்ளியன்று ,நன்கு இருந்தது. சிரியா பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பதற்கான சூழல் உருவானதால், ஆசிய, ஐரோப்பிய பங்குச் சந்தைகளும் ஏற்றம் கண்டன.இந்திய பங்குச் சந்தை களில், காலையில் பங்கு வர்த்தகம் துவங்கிய போது, அதிக ஏற்ற, இறக்கம் காணப்பட்டது. வர்த்தக முடிவின் போது ஏற்றத்தில் முடிந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|