தங்க நகை மீதான இறக்குமதி வரியை மேலும் உயர்த்த திட்டம்தங்க நகை மீதான இறக்குமதி வரியை மேலும் உயர்த்த திட்டம் ... பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு ...
வர்த்தகம் » ரியல் எஸ்டேட்
வடசென்னையில் குடியிருப்புகள் விலை உயர்வு; தெற்கில் மந்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2013
14:11

சென்னையில், கடந்த ஓராண்டில், குடியிருப்புகளின் விலை, 8 - 10 சதவீதம் உயர்ந்து உள்ளது. குறிப்பாக வடக்கு, மேற்கு பகுதிகளில், குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால், அங்கு விலை உயர்ந்து உள்ளது. அதே சமயம், அடிப்படை கட்டமைப்பு பணிகள், மந்தகதியில் நடைபெறும் கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாலிபுரம் சாலை ஆகிய பகுதிகளில், குடியிருப்புகளுக்கு வரவேற்பு குறைந்துள்ளது. இதனால், இப்பகுதிகளில், குடியிருப்புகளின் விலையில் பெரிய அளவில் மாற்றமில்லை என, இந்தியா பிராபர்டி டாட் காம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேடவாக்கம்

அந்த அறிக்கையில், மேலும் கூறப்பட்டுள்ளதாவது: பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில், குடியிருப்புகளை தேடுவோரின் பார்வை மாறியுள்ளது. அவர்கள், சென்னையின் வடக்கு மற்றும் மேற்கில் உள்ள, போரூர், மேடவாக்கம், பெரம்பூர், மாதவரம், பள்ளிக்கரணை, கொளத்தூர் பகுதிகளில், வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இப்பகுதிகளில், குடியிருப்புகளின் விலை உயர்ந்து உள்ளது.

கடந்த, சில ஆண்டுகளுக்கு முன்பு, வேளச்சேரியில், குடியிருப்புகள் அதிகரித்ததை அடுத்து, அருகில் உள்ள, மேடவாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளிலும், குடியிருப்புகளுக்கான தேவை உயர்ந்தது. மேலும், விமான நிலையத்திற்கு அருகே, ஜி.எஸ்.டி., சாலையில் அமைந்துள்ள பல்லா வரம், குரோம்பேட்டை, தாம்பரம் பகுதிகளில், குடியிருப்புகளின் விலை, இன்றளவும் குறைவாகவே உள்ளது. வண்டலூர் தாண்டி, செங்கல்பட்டு வரை, நிலத்தில் முதலீடு செய்வது சிறந்தது. விரைவில் துவக்கப்பட உள்ள, மோனோ ரயில் திட்டம், சென்னையின் இதர பகுதிகளை, ஜி.எஸ்.டி சாலையுடன் இணைக்க உதவும். வளர்ந்து வரும் பகுதிகளில், குறிப்பாக, கிழக்கு மகாபலிபுரம் சாலையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. இப்பகுதிகள், குடியிருப்போரை ஈர்க்க, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் அவசியமானவையாக உள்ளன.

சாலை வசதிகள்

குடியிருப்புகளுக்கு எளிதில் செல்லும் வகையில், உட்புற சாலை வசதிகள் போதுமான அளவிற்கு இல்லாதது, குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் வசதிகளில் குறைபாடு, போன்றவை, சென்னை புறநகர்வாசிகளின் குறைபாடுகளில் முக்கியமானவையாக உள்ளன. சென்னையில், பொதுமக்களின் வசதிக்கான போக்குவரத்தை மேம்படுத்துவதில், அதிகம் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும், நெடுஞ்சாலைகள் விரிவாக்கம், சென்னை மெட்ரோ ரயில் திட்டம், வெளிவட்டச் சாலை திட்டங்களே இதற்கு சான்று. இத்திட்டங்கள், பூர்த்தியாகும் நிலையில், அனைத்து பகுதிகளிலும், குடியிருப்புகளுக்கான தேவையும், விலையும் அதிகரிக்கும். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)