பணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வுபணவீக்கம் 6.1 சதவீதமாக உயர்வு ... தகவல் தொழில்நுட்ப துறை  12 சதவீதம் வளர்ச்சி காணும் தகவல் தொழில்நுட்ப துறை 12 சதவீதம் வளர்ச்சி காணும் ...
இந்தியா இன்போலைன் பைனான்ஸ் ரூ.1,050 கோடிக்கு கடன்பத்திர வெளியீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 செப்
2013
18:21

சென்னை : வங்கி சாரா நிதி சேவையில் ஈடுபட்டு வரும், இந்தியா இன்போலைன் பைனான்ஸ் நிறுவனம் (ஐ.ஐ.எப்.எல்.,), கடன்பத்திர வெளியீடு மூலம், 1,050 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளது.

இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.வெங்கட்ராமன் கூறியதாவது: நிறுவனம், தங்கம் மற்றும் சொத்துகளை அடமானமாக பெற்று கடன் வழங்கி வருகிறது. மேலும், வர்த்தக வாகனம், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றிற்கும் கடன் வழங்குகிறது. நிறுவனத்தின் வ‹லாகாத கடன் குறிப்பிடத்தக்க அளவிற்கு குறைந்துள்ளது. விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நிறுவனம், முதற்கட்டமாக, பங்குகளாக மாறாத கடன்பத்திரங்களை வெளியிட்டு, 525 கோடி ரூபாயை திரட்டி கொள்ள உள்ளது. கடன்பத்திரங்கள் வேண்டி அதிகம் விண்ணப்பங்கள் பெறப்படும் நிலையில், கூடுதலாக, 525 கோடி ரூபாய் திரட்டி கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மூன்று மற்றும் ஐந்து ஆண்டுகள் கால வரையறை கொண்ட, இக்கடன்பத்திரம் ஒன்றின் முகமதிப்பு, 1,000 ரூபாயாகும். குறைந்தபட்சம், 5 கடன்பத்திரங்களில், அதாவது, 5,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதற்கு, ஆண்டுக்கு, 12.68 சதவீதம் வட்டி வழங்கப்படும். மேலும், கேர் நிறுவனம், இக்கடன்பத்திர வெளியீட்டிற்கு, 'கேர் ஏஏ' தரக்குறியீட்டை வழங்கியுள்ளது.

இக்கடன்பத்திர வெளியீடு, இம்மாதம் 17ம் தேதி தொடங்கி, வரும் அக்டோபர் 4ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில், இக்கடன்பத்திரங்கள் பட்டியலிடப்பட உள்ளன. இவ்வாறு, வெங்கட்ராமன் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)