அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.44 கோடியாக வளர்ச்சிஅலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.44 கோடியாக வளர்ச்சி ... தங்க நகை மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்பு தங்க நகை மீதான இறக்குமதி வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ...
ரூ.20,200 கோடியில் என்.டி.பி.சி., நிறுவனம் விரிவாக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 செப்
2013
00:19

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., நிறுவனம், அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. இந் நிறுவனம், நடப்பு, 2013-14ம் நிதியாண்டில், 20,200 கோடி ரூபாய் செலவில், பல்வேறு விரிவாக்க திட்டங்களை மேற் கொள்ள இருப்பதாக, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர், அருப்ராய் சவுத்ரி தெரிவித்தார்.
மின் உற்பத்தி: கடந்த நிதியாண்டில், இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளுக்காக, 19,926 கோடி ரூபாயை செலவிட்டு உள்ளது. அவ்வாண்டில், இந்நிறுவனம், கூடுதலாக, 4,170 மெகாவாட் மின் உற்பத்தி மேற்கொள்ளும் வகையில், திட்டங்களை அமல்படுத்தின.
இதில், கூட்டுத் திட்டத்தில் மேற் கொள்ளப்பட்ட, 1,000 மெகா வாட் மின் உற்பத்தி திட்டமும் அடங்கும். தற்போது, இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி திறன், 41,187 மெகா வாட் என்ற அளவில் உள்ளது.இந்நிறுவனம், சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைத்துள்ள சிப்பாட் அனல் மின் உற்பத்தி திட்டத்தை வரும் வியாழனன்று, பிரதமர் மன்மோகன் சிங் துவக்கி வைக்க உள்ளார்.
2,980 மெகா வாட் திறன் கொண்ட, இந்த அனல் மின் உற்பத்தி பிரிவின் முதல் பகுதியில், தலா, 660 மெகா வாட் திறன் கொண்ட மூன்று அனல் மின் நிலையங்களும், இரண்டாவது பிரிவில், தலா, 500 மெகா வாட் திறனில், இரண்டு மின் நிலையங்களும் இடம் பெற்றுள்ளன.
பங்கு மூலதனம்:இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள இரு மின் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன.கடந்த ஆண்டு, மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், 9.5 சதவீத பங்குகளை விற்பனை செய்து, 11,400 கோடி ரூபாயை திரட்டி கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)