பதிவு செய்த நாள்
18 செப்2013
00:25

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், சில்லரை முதலீட் டாளர்கள், ஆர்வத்துடன் பங்குகளில் முதலீடு மேற்கொண்டதையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத் துடன் முடிவடைந்தது.
ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.நேற்றைய வியாபாரத்தில், தகவல் தொழில்நுட்பம்,நுகர்பொருட்கள்,உலோகம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த, நிறுவனப்பங்குகளுக்கு தேவை காணப் பட்டது. அதேசமயம், ரியல் எஸ்டேட், வங்கி, மின்சாரம் ஆகிய துறைகளைச் சேர்ந்த, நிறுவனப் பங்குகளுக்கு தேவை, குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 61.56 புள்ளிகள் அதிகரித்து,19,804.03 புள்ளி களில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 19,819.10 புள்ளி கள் வரையிலும், குறைந்தபட்சமாக, 19,635.44 புள்ளிகள் வரையிலும் சென்றது.
"சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், விப்ரோ,டாக்டர் ரெட்டீஸ், டி.சி.எஸ்.,உள்ளிட்ட, 19 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், ஓ.என்.ஜி.சி., சன்பார்மா, ஹீரோ மோட்டோகார்ப் உள்ளிட்ட,11 நிறுவனப் பங்குகளின் விலை, குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"நிப்டி', 9.65 புள்ளிகள் உயர்ந்து,5,850.20 புள்ளி களில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 5,857.80 புள்ளிகள் வரையிலும், குறைந்த பட்சமாக, 5,804.90 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|