பதிவு செய்த நாள்
19 செப்2013
00:03
சென்னை:நேற்று ஒரே நாளில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு, 200 ரூபாய் குறைந்து, 22,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
மத்திய அரசு, நேற்று முன்தினம், இரவு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும், தங்க ஆபரணங்கள் மீதான சுங்க வரியை, 15 சதவீதமாக உயர்த்தியது.இதனால், ஆபரணங்கள் விலை உயரக் கூடும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சர்வதேச சந்தையில், தங்கம் விலை குறைந்ததை அடுத்து, உள்நாட்டிலும், இதன் விலை குறைந்தது.சென்னையில், நேற்று முன்தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,804 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,432 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கம், 29,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் குறைந்து, 2,779 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 200 ரூபாய் சரிவடைந்து, 22,232 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 10 கிராம் சுத்த தங்கம், 265 ரூபாய் குறைந்து, 29,725 ரூபாய்க்கு விற்பனையானது.ஒரு கிராம் வெள்ளி, 52.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 49,195 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|