பதிவு செய்த நாள்
19 செப்2013
00:15
மும்பை:ஒலி, காணொலி சாதனங்களுக்கான சந்தை மதிப்பு, வரும் 2015ம் ஆண்டிற்குள், ஒட்டு மொத்த அளவில், 25 சதவீதம் வளர்ச்சி கண்டு, 510 கோடி டாலராக அதிகரிக்கும் என, இன்போகாம் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில், ஒலி மற்றும் காணொலி சாதனங்களுக்கான சந்தை, சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது.
குறிப்பாக, கல்வி, அடிப்படை கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறை களைச் சேர்ந்த நிறுவனங்கள் தகவல் தொழில்நுட்பங்களுக்காக செலவிடுவது, உயர்ந்து வருகிறது. இதையடுத்து,உலகளவில், ஒலி,ஒளி சாதனங்கள் சந்தை, 14 சதவீதம் வளர்ச்சி கண்டு, வரும் 2015ம் ஆண்டிற்குள், 11,500 கோடி டாலராக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, இன்போகாம் நிறுவனத்தின், பொது மேலாளர் ரிச்சர்டு டான் கூறியதாவது:
பொருளாதார மந்த நிலையிலும், இந்திய நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பங்களுக்காக செல விடுவது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வரும்2015ம் ஆண்டிற்குள், ஆசிய பிராந்தியத்தில், ஒலி மற்றும் காணொலி சாதனங்களுக்கான சந்தையில், இந்தியா மூன்றாவது மிகப்பெரிய நாடாக உருவெடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|