பதிவு செய்த நாள்
20 செப்2013
00:36
புதுடில்லி:டாட்டா சன்ஸ் நிறுவனம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, விமானச் சேவையை மேற்கொள்ள உள்ளது.இதுகுறித்து டாட்டா சன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உடன் இணைந்து, இந்தியாவில் சர்வதேசச தரத்தில், விமானச் சேவையை வழங்க டாட்டா சன்ஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, இரு நிறுவனங்களுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.புதிய விமான நிறுவனத்தின் தலைவராக பிரசாத் மேனன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்நிறுவனத்தில், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு முதலீடு, 51சதவீதமாகவும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பங்கு முதலீடு, 49 Œதவீதமாகவும் இருக்கும்.
விமான நிறுவனத்தின் பெயர், பிராண்டு, நிர்வாக குழு, சேவைகள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டாட்டா குழுமம், ஏற்கனவே, ஏர் ஏஷியா நிறுவனத்துடன் இணைந்து, குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்க ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|