பதிவு செய்த நாள்
20 செப்2013
01:12
மும்பை:அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 63.39 ஆக இருந்தது. இந்நிலையில், அமெரிக்க மத்திய வங்கியின் சந்தை ஆய்வுக் கூட்டத்தில், பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை தொடர்வது என, முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அமெரிக்க மத்திய வங்கி, மாதந்தோறும், 8,500 கோடி டாலருக்கு (5.10 லட்சம் கோடி ரூபாய்) கடன் பத்திரங்களை தொடர்ந்து வாங்கும் என்பதால், நேற்று சர்வதேச நிதிச் சந்தைகள் எழுச்சி கண்டன.
அமெரிக்க மத்திய வங்கி கடன் பத்திரங்களை வாங்குவதன் மூலம், அமெரிக்க பொருளாதாரத்தில் பண புழக்கத்தை அதிகரிக்கிறது. இது, அங்குள்ள வட்டி விகிதத்தை குறையச் செய்யும். அதனால், அமெரிக்காவை விட அதிக வட்டி விகிதம் உள்ள இந்தியா போன்ற நாடுகளில் முதலீடு செய்ய சர்வதேச வங்கிகளும், நிறுவனங்களும் முன்வரும்.
உள்நாட்டில், அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்திலேயே, டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, முன்தினத்தை விட, 2.51 சதவீதம் உயர்ந்து, 61.83 ஆக அதிகரித்தது. வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, 160 கா”கள் அதிகரித்து, 61.78ல் நிலை கொண்டது.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர், ரகுராம் ராஜன், அன்னிய முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், கடந்த இரு வாரங்களாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.இதன் விளைவாக, நிதிச் சந்தையில், அன்னிய முதலீடு அதிகரிக்கத் துவங்கியுள்ளது. இதனால், வீழ்ச்சி கண்டு வந்த பங்குச் சந்தை எழுச்சியடைந்து வருகிறது. தொடர்ந்து சரிவடைந்து வந்த ரூபாய் மதிப்பு, கடந்த 10 நாட்களாக உயர்ந்து வருகிறது.இதற்கு, மேலும் வலு சேர்க்கும் விதமாக, அமெரிக்க மத்திய வங்கியின் அறிவிப்பு இருந்தது என, அன்னியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|