பதிவு செய்த நாள்
20 செப்2013
11:23
மும்பை: இந்திய பங்குச்சந்தை வாரத்தின் இறுதி நாளான இன்று சரிவுடன் தொடங்கியுள்ளது. இன்றைய வர்த்தக நேர தொடக்கத்தின் போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 25.59 புள்ளிகள் குறைந்து 20621.05 புள்ளிகளோடு காணப் பட்டது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 10.90 புள்ளிகள் குறைந்து 6104.65 புள்ளிகளோடு காணப்பட்டது. நாட்டின் பங்கு வர்த்தகம், நேற்று மிகவும் சிறப்பாக இருந்தது. அமெரிக்க மத்திய வங்கி, மாதந்தோறும் சந்தை யிலிருந்து, கடன் பத்திரங்களை வாங்கும் சிறப்பு ஊக்குவிப்பு திட்டம் தொடரும் என்று அறிவித்தது. இதன் எதிரொலியாக, இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப் பட்டது. ஒரே நாளில் "சென்செக்ஸ்' 3.43 சதவீதம் அதிகரித்து, 20,600 புள்ளிகளை கடந்தும், "நிப்டி', 3.66 சதவீதம் உயர்வுடன், 6,100 புள்ளிகளை தாண்டியும் நிறைவடைந்தன. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவாக, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் வர்த்தகம் நன்கு இருந்தது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|