பருத்தி பஞ்சு ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரிபருத்தி பஞ்சு ஏற்றுமதிக்கு 10 சதவீதம் வரி ... நாட்டின் பட்டாணி உற்பத்தி39.42 லட்சம் டன்னாக வளர்ச்சி நாட்டின் பட்டாணி உற்பத்தி39.42 லட்சம் டன்னாக வளர்ச்சி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
விபத்தில் உதவும் புதிய நண்பன் கார் கறுப்பு பெட்டி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 செப்
2013
22:41

கறுப்பு பெட்டி என்றால், அனைவரும் அறிந்தது, அது விமானத்தில் இருக்கும் என்று தான். அந்த கறுப்பு பெட்டி இப்போது, பஸ் மற்றும் கார் போன்ற வாகனங்களுக்கும் பொருத்தப்பட உள்ளது. விமானத்தில் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால், அந்த விபத்து குறித்த முக்கிய தகவல்களை, நிஜத்தை கூறும் கருவியாக இருப்பது தான் கறுப்பு பெட்டி. கறுப்பு பெட்டி என்பது, "ஈவென்ட் டேட்டா ரெக்கார்டர்' அதாவது, நடந்த நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையில் பயன்படுவது. இது, தற்சமயம் கார்களில் வரப்போகிறது என்பது, ஆச்சரியமான விஷயம். இதன் மூலம், கார்களில் ஏற்படும் விபத்துகளின் உண்மையான காரணம், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உண்மையை விளக்கும் கருவியாக, போலீஸ் விசாரணையின்போது, நீதிமன்றங்களில் ஓர் சாட்சியாக செயல்படக்கூடிய, முக்கிய கருவியாக கறுப்பு பெட்டி உதவி செய்ய முடியும்.

காரில் கறுப்பு பெட்டி பொருத்துவதன் பயன் குறித்த ஆய்வில், கறுப்பு பெட்டி பொருத்திய கார்களில், ஓட்டுனர்களால், 10 சதவீதம் அளவு விபத்துகள் குறைந்துள்ளது என அறியப்பட்டுள்ளது.கார் கறுப்பு பெட்டியின் தொழில்நுட்பம்: காரில் பொருத்தப்படக்கூடிய கறுப்பு பெட்டிகள், 1996ல் பொருத்தப்பட்டு விட்டன. ஆனால், அது குறித்து, போதிய விஷயம் மக்கள் அறியவில்லை. இன்றைய அயல்நாட்டில் ஓடும், 75 சதவீதத்திலான கார்களில், இந்த கறுப்பு பெட்டி உள்ளன. கறுப்பு பெட்டிகள், வேறு காரணத்திற்கு காரில் அமைக்கப்பட்டது. ஆம், ஏர்பேக் செயல்படும் விதத்தை ஆராயும் நோக்கில், முதன்முதலாக பயன்படுத்தப்பட்டன. பின், அதுவே, காரின் முக்கிய தகவல் கருவியாக வடிவமைக்கபட்டு விட்டது.காரில் இருக்கும் கறுப்பு பெட்டி மூலம், காரின் வேகம், சமீபத்திய இயக்கம், ஓட்டுனர் பிரேக் போட்ட விதம், கொடுத்த சமிக்ஞைகள் போன்ற, 20 வகையான புள்ளி விவரங்கள் பதிவாகும் மோதல்கள் ஏற்படுவதற்கு, 5 முதல் 10 நிமிடங்கள் முன்னரே, கறுப்பு பெட்டி பதிவுகள் நடைபெறும்.
இந்த கறுப்பு பெட்டியில், தகவல்களை, குறியீடுகள் வழியாக தெரிவிக்கும் கருவி என்றாலும், வீடியோ மூலம் பதிவு செய்து தெரிவிக்கும் என்றவாறும் உள்ளன.

வீடியோ மூலம், பதிவு செய்து தரும் கறுப்புப் பெட்டிகள், கூடுதல் சிறப்பு தன்மை கொண்டவை.
இந்த வீடியோ பதிவிலான கறுப்பு பெட்டி, விண்ஷீல்டு பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இதில் உள்ள கேமரா மூலம், தகவல்கள் சேகரிக்ப்பட்டு, ஜி.பி.எஸ்., உதவியுடன், கணினி ஒத்துழைப்புடன் பதியப்படும். ஆக்சிலேட்டர் கொடுப்பது, பிரேக் பிடிப்பது, வளைப்பது முதற்கொண்டு, அனைத்தும் இதில் பதிவாகும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் உடனக்குடன் தானாகவே அதில் உள்ள, "செக்யூர் டிஜிட்டல் கார்டில்' சேமிக்கப்பட்டு விடும்.
வீடியோ அடிப்படையிலான இந்த வகை கறுப்பு பெட்டி மூலம், மிகத் துல்லியமாக நேரம், இடம், வாகன இயக்கத்தின் போது, திசை, வாகன ஓட்டுனரின் பார்வை போன்றவை பதியப்படுகின்றன. இந்த பதிவுகள் மூலம், விபத்தின் தன்மையை அறிய உதவுகிறது. இதில் ஏதேனும், அதாவது வாகனம் மஞ்சள் விளக்கு எரிந்தபோது சென்றதா, சிவப்பு விளக்கு எரிந்தபோது கடந்து வந்ததா என்பதை கூட தெளிவாக அறிய முடியும். 2006ல் ஐரோப்பியாவில் நடைபெற்ற ஓர் வழக்கில், காரில் இருந்த கறுப்பு பெட்டி மூலம் உண்மை கண்டறியப்பட்டது. தற்சமயம் நவீன கார்களில், கறுப்பு பெட்டி பொருத்தபட்டு வரும்போது, விபத்தில்லா பயணங்கள் அரங்கேறும் என்பதே உண்மை.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)