பதிவு செய்த நாள்
29 செப்2013
01:24

மும்பை:நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு, சென்ற, 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், 203 கோடி டாலர் (12,180 கோடி ரூபாய்) அதிகரித்து, 27,738 கோடி டாலராக (16.64 லட்சம் கோடி ரூபாய்) வளர்ச்சி கண்டுள்ளது என, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இது, இதற்கு முந்தைய வாரத்தில், 54.50 கோடி டாலர் உயர்ந்து, 27,535 கோடி டாலராக (16.52 லட்சம் கோடி ரூபாய்) இருந்தது. ஆக, தொடர்ந்து இரண்டு வாரங்களாக, நாட்டின் அன்னியச் செலாவணி கையிருப்பு வளர்ச்சி கண்டு வருகிறது.மதிப்பீட்டு வாரத்தில், அன்னியச் செலாவணி சொத்து மதிப்பு, 197 கோடி டாலர் உயர்ந்துள்ளது. அதேசமயம், கையிருப்பில் உள்ள தங்கத்தின் மதிப்பு மாற்றமின்றி, 2,172 கோடி டாலர் என்ற அளவிலேயே உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|