பதிவு செய்த நாள்
16 அக்2013
15:32
பெங்களூரு : டி.சி.எஸ். நிறுவனத்தின் நிகரலாபம் 34 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருக்கும் மற்றொரு முன்னணி ஐ.டி. நிறுவனம் டி.சி.எஸ். எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீஸ். இந்நிறுவனம் நடப்பாண்டுக்கான இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனம் எதிபார்த்ததைவிட அதிக லாபம் ஈட்டியுள்ளது. இரண்டாம் காலாண்டில் டி.சி.எஸ். நிகரலாபம் 34 சதவீதம் உயர்ந்து ரூ.4,702 கோடியாக இருக்கிறது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.3,512 கோடியாக இருந்தது.
உலகளவில் மற்ற நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கையை டி.சி.எஸ். நிறுவனம் சிறப்பாக செய்து வருவதால் அந்நிறுவனத்தின் லாபம் அதிகரித்து வருவதாக டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். டி.சி.எஸ். லாபம் அதிகரித்ததை தொடர்ந்து அந்நிறுவனத்தின் பங்கு விலையும் உயர்ந்தது.
மேலும் ஐ.டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|