பதிவு செய்த நாள்
18 அக்2013
02:38
மும்பை : பணவீக்கம், வட்டி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய வங்கிப் பங்குகளில் மேற்கொண்டுள்ள முதலீட்டை குறைத்துக் கொண்டுள்ளன.
சென்ற ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 13 முன்னணி வங்கிகளில், 9 வங்கிகளில் மேற்கொண்டிருந்த பங்கு முதலீட்டை, அன்னிய நிதி நிறுவனங்கள், குறைத்துக் கொண்டன.அதே சமயம், இரண்டு வங்கிகளில் முதலீட்டை அதிகரித்துள்ளன.
மதிப்பீட்டு காலாண்டில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில், அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த பங்கு முதலீடு, முந்தைய காலாண்டை விட, 0.91 சதவீதம் குறைந்து, 9.79 சதவீதத்தில் இருந்து, 8.88 சதவீதமாக சரிவடைந்துள்ளது. அது போன்று, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிப் பங்கில் மேற்கொண்டிருந்த முதலீடு, 39.24 சதவீதத்தில் இருந்து, 37.56 சதவீதமாக குறைந்துள்ளது.எச்.டீ.எப்.சி வங்கிப் பங்கில், செய்துள்ள முதலீடு, 34.49 சதவீதத்தில் இருந்து, 33.61 சதவீதமாக சரிவடைந்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|