பதிவு செய்த நாள்
18 அக்2013
02:39
மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு நேற்று உயர்ந்தது.கடந்த செவ்வாயன்று, ரூபாய் மதிப்பு, 61.84 ஆக இருந்தது. இது, நேற்று, 62 காசுகள் அதிகரித்து, 61.22ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி சந்தையில், வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.56 ஆக உயர்ந்து இருந்தது. இது, ஒரு கட்டத்தில், 61.20ஆக மேலும் அதிகரித்து காணப்பட்டது.
அமெரிக்காவில், நிதி மசோதா நிறைவேறவும், கடன் வரம்பை உயர்த்தவும், ஒத்துழைப்பதாக, எதிர்க் கட்சி தெரிவித்துள்ளது. இப்பிரச்னையில், கடந்த இரண்டு வாரங்களாக நீடித்து வந்த இழுபறி, முடிவிற்கு வந்ததை அடுத்து, டாலருக்கான தேவை குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால், ரூபாய் மதிப்பு அதிகரித்துள்ளது.
எனினும் கடந்த ஜனவரி முதல் இதுவரையிலுமாக, ரூபாய் மதிப்பு, 10.53 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான ஆசிய கரன்சிகள் மதிப்பு குறைந்துள்ளதில், ஜப்பானின் யென், முதலிடத்திலும், இந்தியாவின் ரூபாய் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|