என்.எம்.டீ.சி., நிறுவனம்இரும்பு தாது உற்பத்தி 1.29 கோடி டன்னாக உயர்வுஎன்.எம்.டீ.சி., நிறுவனம்இரும்பு தாது உற்பத்தி 1.29 கோடி டன்னாக உயர்வு ... அரசு முகமை அமைப்புகளிடம் உள்ளஉணவு தானிய கையிருப்பு குறைந்தது அரசு முகமை அமைப்புகளிடம் உள்ளஉணவு தானிய கையிருப்பு குறைந்தது ...
தமிழக கறிக்கோழிக்கு "பிளாட் ரேட்" நிர்ணயம் வரத்து குறைவால் கேரளாவுக்கு வருவாய் இழப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2013
02:50

நாமக்கல் : தமிழக கறிக்கோழிகளுக்கு, கேரளாவில், "பிளாட் ரேட்" நிர்ணயிக்கப்பட்டதால், அங்கு கறிக்கோழி வரத்து குறைந்துள்ளது. இதனால், கேரள அரசுக்கு, இரண்டு விதத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விலை நிர்ணயம்:பல்லடம், தேசிய கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு, கறிக்கோழிக்கு வாரந்தோறும் விலை நிர்ணயம் செய்கிறது. அந்த விலைக்கு, வாரந்தோறும், 20 லட்சம் கிலோ கறிக்கோழிகள், கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கேரள அரசு, ஒரு கிலோ உயிருள்ள கோழியின் விலை, 95 ரூபாய் எனவும், ஒரு நாள் வயதுடைய கோழிக் குஞ்சின் விலை, 45 ரூபாய் எனவும், "பிளாட்ரேட்" நிர்ணயம் செய்தது.இதற்கு, 13.5 சதவீதம் வரை வரி வசூலிக்கும் திட்டத்தை, கடந்த ஆகஸ்ட் மாதம், 29ம் தேதி முதல் அமல்படுத்தியது.இதற்கு, தமிழக கறிக்கோழி பண்ணையாளர்கள் மட்டுமின்றி, கேரள ஓட்டல் உரிமையாளர் கள் மற்றும் நுகர்வோரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஆகஸ்ட், 29ம் தேதிக்கு முன், ஒரு கிலோ உயிர் கறிக்கோழியின் விலை, 60 ரூபாய் என்று வைத்துக் கொண்டால், அதற்கு, 13.5 சதவீதம் வரி (8.10 ரூபாய்), போக்குவரத்து செலவு, 8 ரூபாய் (ஒரு கோழிக்கு) ஆகியவற்றை சேர்த்தால், அடக்க விலை, 76.10 ரூபாய் என்ற அளவில் இருக்கும்.
தற்போது, கேரள அரசின், "பிளாட்ரேட்" திட்டப்படி, ஒருகிலோ உயிர்கறிக்கோழியின் விலை, 95 ரூபாய் என்ற அடிப்படையில், 13.5 சதவீதம் வரியாக, 12.82 ரூபாய் செலுத்த வேண்டும். இதனால், அதிகபட்சமாக கிலோவுக்கு, ஆறு ரூபாய் வரை கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கூடுதல் வரியை செலுத்த விரும்பாத தமிழக பண்ணையாளர்களில் சிலர், சென்னை, பெங்களூரு, ஆந்திரா ஆகிய பகுதிகளில் கறிக்கோழியை அனுப்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதனால், வாரந்தோறும் கேரளாவிற்கான கறிக்கோழி வரத்து, 20 லட்சம் கிலோவில் இருந்து, 10 லட்சம் கிலோவாக குறைந்தது.
பாதிப்பு:நாமக்கல் கறிக்கோழி உற்பத்தியாளர் சுப்ரமணியம் கூறியதாவது:கேரள அரசின் புதிய திட்டத்தால், இரண்டு வகையில் அந்த மாநிலத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு கறிக்கோழி வரத்து, 50 சதவீதம் குறைந்துள்ளது; கூடுதல் வரிவிதிப்பால், நுகர்வோர், கிலோவுக்கு, 25 ரூபாய் வரை கூடுதல் விலை கொடுத்து கறிக்கோழி வாங்க வேண்டியுள்ளது.இப்பிரச்னைகளை கருத்தில் கொண்டு, கேரள அரசு, மீண்டும் பழைய நடைமுறையை அமல்படுத்தினால், அம்மாநில அரசும், நுகர்வோரும் பயன் பெறுவர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)