பதிவு செய்த நாள்
19 அக்2013
01:21
திண்டுக்கல்:சூரியகாந்தி விதைக்கான விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லாததால், கையிருப்பை உடனடியாக விற்பனை செய்யுமாறு, விவசாயிகளுக்கு வேளாண் வணிகத்துறை யோசனை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், சித்திரையில் விளைவிக்கப்பட்ட சூரியகாந்தி விதைகள், தற்போது விற்பனைக்கு வரத் துவங்கியுள்ளன. மின்சார பற்றாக்குறை, மழை இல்லாதது, வேலையாட்கள் கிடைக்காதது போன்ற காரணங்களால், மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டிற்கு தேவையான சமையல் எண்ணெய்வகைகளை, வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்ய, மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.13 லட்சம்டன் சோயாஎண்ணெய், 12 லட்சம்டன் சூரியகாந்திஎண்ணெய், 0 ஆயிரம்டன் இதர உணவு எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால், வரும் மாதங்களில் சூரியகாந்தி விதையின் விலை அதிகரிக்க வாய்ப்பில்லை.எனவே, தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள கிலோ 38 ரூபாய்க்கு விலைக்கு, இவ்விதைகளை விற்பனைசெய்து பயனடையுமாறு விவசாயிகளுக்கு, வேளாண் வணிகத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|