பதிவு செய்த நாள்
26 அக்2013
05:18
மும்பை:பொதுத் துறையைச் சேர்ந்த, பவர்கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனம், வரும் டிசம்பர் மாதத்தில், இரண்டாவது பங்கு வெளியீடு வாயிலாக, 4,650 கோடி ரூபாய் திரட்ட
திட்டமிட்டு உள்ளதாக, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆர்.என்.நாயக் தெரிவித்தார்.
இதில், நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள, மொத்த பங்கு மூலதனத்தில்,
4 சதவீதமும், புதிய பங்கு விற்பனை, 13 சதவீதமும் அடங்கும்.தற்போது, நிறுவனத்தின் மொத்த பங்கு மூலதனத்தில், மத்திய அரசு, 69.94 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டு உள்ளது.
நடப்பு 2013 – 14ம் நிதியாண்டில், பவர் கிரிட் நிறுவனம், 22 ஆயிரம் கோடி ரூபாய் திட்ட செலவில், பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.நடப்பு
நிதியாண்டின், செப்டம்பர் வரையிலான காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த நிதிஆண்டின் இதே காலாண்டை விட, 10 சதவீதம் அதிகரித்து, 1,126 கோடியிலிருந்து, 1,239 கோடி ரூபாயாக உயர்ந்துஉள்ளது.
இதே காலத்தில், நிறுவனத்தின் மொத்த வருவாய், 27 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3,243
கோடியிலிருந்து, 4,104 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, நாயக் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|