பவர் கிரிட் கார்ப்­ப­ரேஷன் நிறுவனம் ரூ.4,650 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம்பவர் கிரிட் கார்ப்­ப­ரேஷன் நிறுவனம் ரூ.4,650 கோடிக்கு பங்கு வெளியிட திட்டம் ... தீவன விலை உயர்வு, பயன்­பாடு குறைந்ததுகோழிப்பண்ணை தொழில் கடும் பாதிப்பு தீவன விலை உயர்வு, பயன்­பாடு குறைந்ததுகோழிப்பண்ணை தொழில் கடும் பாதிப்பு ...
தெலுங்­கானா போராட்­டம் எதிரொலி சேலத்தில் பட்டு சேலைகள் தேக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2013
05:24

மேட்டூர்:தெலுங்­கானா போராட்­டத்தால், ஆந்திராவில்இருந்து, சேலத்­திற்குபட்டுசேலை­களை வாங்க வரும் வியா­பா­ரி­களின் எண்­ணிக்கை குறைந்­துள்­ளது. இதனால், சேலத்தில், பட்டுச் சேலைகள் அதிக அளவில் தேக்கம் அடைந்­துள்­ளன.
சேலம் மாவட்டம், மேச்­சேரி, வன­வாசி, நங்­க­வள்ளி, ஜல­கண்­ட­புரம், இளம்­ பிள்ளை,
தார­மங்­கலம் சுற்­றுப்­ப­கு­தியில், 50 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட, கைத்­தறி மற்றும் விசைத்­தறி பட்டு நெசவுக் கூடங்கள் உள்­ளன.இங்கு தயா­ரிக்­கப்­படும் பட்டு சேலைகள், நாடு முழு­வதும் விற்­ப­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன.ஆந்­தி­ராவில் இருந்து, 200க்கும் மேற்­பட்ட வியா­பா­ரிகள் சேலம் வந்து, பட்டு சேலைகளை கொள்­முதல் செய்­வது வழக்கம்.
ஆனால், கடந்த சில மாதங்­க­ளாக, ஆந்தி­ராவில், நடை­பெற்று வரும் தெலுங்­கானா போராட்­டத்தால்,சேலத்­திற்கு ஆந்­திர வியா­பா­ரிகள் வரு­வது மிகவும் குறைந்துவிட்­டது.இது­கு­றித்து, நங்­க­வள்ளி பட்டு சேலை உற்­பத்­தி­யாளர் பத்­ம­நாபன் கூறி­ய­தா­வது:
தீபா­வளி, தெலுங்கு வருட பிறப்பு சம­யத்தில், ஆந்­தி­ராவில் பட்­டு­சேலை விற்­பனை அதி­க­மாக இருக்கும். ஆண்­டு­ தோறும், நங்­க­வள்ளி சுற்றுப் பகு­தியில் மட்டும், ஆந்­திரா வியா­பா­ரிகள், 200க்கும் மேற்­பட்டோர் முகா­மிட்டு, பட்டு சேலை­களை, கொள்­முதல் செய்வர்.
சேலம் மாவட்­டத்தில் இருந்து மாதம் தோறும், 100 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பட்டு சேலைகள், ஆந்­தி­ரா­வுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்­கப்­படும்.
தெலுங்­கானா பிரச்னை கார­ண­மாக, சில மாதங்­க­ளாக, ஆந்­திரா வியா­பா­ரிகள் வருகை குறைந்து விட்­டது. இதனால், வழக்­கத்தை விட குறை­வாக, 25 சத­வீத சேலைகள் மட்­டுமே, ஆந்­தி­ரா­வுக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன.
ஆனால், தெலுங்­கானா போராட்­டத்தால், அங்­குள்ள கடை­க­ளிலும் விற்­பனை குறைந்து விட்­டது. இதனால், ஆந்­திரா வியா­பா­ரிகள், குறித்த காலத்தில் பணம் அனுப்­பு­வ­தில்லை.நிலைமை சீர­டைய, மேலும் பல மாதங்கள் ஆகும் என்­பதால், சேலம் மாவட்ட பட்டு சேலை உற்­பத்­தி­யா­ளர்­களும், வியா­பா­ரி ­களும் கவலை அடைந்துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)