பதிவு செய்த நாள்
26 அக்2013
05:24
மேட்டூர்:தெலுங்கானா போராட்டத்தால், ஆந்திராவில்இருந்து, சேலத்திற்குபட்டுசேலைகளை வாங்க வரும் வியாபாரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால், சேலத்தில், பட்டுச் சேலைகள் அதிக அளவில் தேக்கம் அடைந்துள்ளன.
சேலம் மாவட்டம், மேச்சேரி, வனவாசி, நங்கவள்ளி, ஜலகண்டபுரம், இளம் பிள்ளை,
தாரமங்கலம் சுற்றுப்பகுதியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, கைத்தறி மற்றும் விசைத்தறி பட்டு நெசவுக் கூடங்கள் உள்ளன.இங்கு தயாரிக்கப்படும் பட்டு சேலைகள், நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.ஆந்திராவில் இருந்து, 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் சேலம் வந்து, பட்டு சேலைகளை கொள்முதல் செய்வது வழக்கம்.
ஆனால், கடந்த சில மாதங்களாக, ஆந்திராவில், நடைபெற்று வரும் தெலுங்கானா போராட்டத்தால்,சேலத்திற்கு ஆந்திர வியாபாரிகள் வருவது மிகவும் குறைந்துவிட்டது.இதுகுறித்து, நங்கவள்ளி பட்டு சேலை உற்பத்தியாளர் பத்மநாபன் கூறியதாவது:
தீபாவளி, தெலுங்கு வருட பிறப்பு சமயத்தில், ஆந்திராவில் பட்டுசேலை விற்பனை அதிகமாக இருக்கும். ஆண்டு தோறும், நங்கவள்ளி சுற்றுப் பகுதியில் மட்டும், ஆந்திரா வியாபாரிகள், 200க்கும் மேற்பட்டோர் முகாமிட்டு, பட்டு சேலைகளை, கொள்முதல் செய்வர்.
சேலம் மாவட்டத்தில் இருந்து மாதம் தோறும், 100 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பட்டு சேலைகள், ஆந்திராவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.
தெலுங்கானா பிரச்னை காரணமாக, சில மாதங்களாக, ஆந்திரா வியாபாரிகள் வருகை குறைந்து விட்டது. இதனால், வழக்கத்தை விட குறைவாக, 25 சதவீத சேலைகள் மட்டுமே, ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஆனால், தெலுங்கானா போராட்டத்தால், அங்குள்ள கடைகளிலும் விற்பனை குறைந்து விட்டது. இதனால், ஆந்திரா வியாபாரிகள், குறித்த காலத்தில் பணம் அனுப்புவதில்லை.நிலைமை சீரடைய, மேலும் பல மாதங்கள் ஆகும் என்பதால், சேலம் மாவட்ட பட்டு சேலை உற்பத்தியாளர்களும், வியாபாரி களும் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|