எல்.இ.டீ.டி.வி. விற்பனை அதிகரிப்புஎல்.இ.டீ.டி.வி. விற்பனை அதிகரிப்பு ... எல்.ஐ.சி., நிறுவனம்: பங்கு முத­லீடுரூ.40 ஆயிரம் கோடியை தாண்டும் எல்.ஐ.சி., நிறுவனம்: பங்கு முத­லீடுரூ.40 ஆயிரம் கோடியை தாண்டும் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்­கி­களின் சில்­லரை கடன் ரூ.9.65 லட்சம் கோடி­யாக உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2013
00:27

மும்பை:கடந்த செப்­டம்பர் மாதத்தில், வங்­கிகள் வழங்­கிய சில்­லரை கடன், 17.9 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 9,65,300 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, சென்ற ஆண்டு இதே மாதத்தில், 13 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 8,18,800 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்தில், வங்­கி­களின் உணவு சாரா கடன், 15.9 சத­வீதத் தில் இருந்து, 18.2 சத­வீ­த­மாக வளர்ச்சி கண்­டுள்­ளது என, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டு உள்­ளது.
பொரு­ளா­தார வளர்ச்சி:நடப்பு நிதி­யாண்டில், இந்­தி­யா வின் பொரு­ளா­தார வளர்ச்சி, மதிப்­பீட்டை விட, குறை­வாக இருக்கும் என, உலக வங்­கியும், பன்­னாட்டு நிதி­யமும் தெரி­வித்­து உள்­ளன.இந்த நிலையில், வங்­கி­களின் கடன் வளர்ச்சி அதி­க­ரித்து­இருப்­பது, கடன்­க­ளுக்­கான தேவை உயர்ந்து வரு­வ­தையும், பல்­வேறு துறை­கள் வளர்ச்­சி கண்டு வருவதையும் எடுத்துக் காட்­டு­வ­தாக உள்­ளது.கடந்த ஆகஸ்ட் மாதம், வங்கி­களின் உணவு சாரா கடன், 17 சத­வீதம் வளர்ச்சி கண்­டு­இருந்­தது. இது, சென்ற ஆண்டு, இதே காலத்தில், 15.9 சத­வீ­த­மாக இருந்­தது.
சென்ற செப்­டம்­பரில், வங்கிகள், தொழில்­து­றைக்கு வழங்­கிய கடன், 17.6 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 23,71,500 கோடி ரூபா­யாக உயர்ந்துள்­ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 20,16,300 கோடி ரூபா­யாக இருந்­தது.பொறி­யியல், கட்­டு­மானம், கண்­ணாடி மற்றும் கண்­ணாடி பொருட்கள், சுரங்கம் மற்றும் குவா­ரிகள் துறைகள் நீங்­க­லாக, இதர துறை­க­ளுக்கு, வங்­கிகள் வழங்­கிய கடன், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு உயர்ந்­துள்­ளது.
சேவை துறை:சென்ற செப்­டம்­பரில், சேவைகள் துறைக்கு, வங்­கிகள் வழங்­கிய கடன், 14.4 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 12,55,300 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 10,27,900 கோடி ரூபா­யாக இருந்­தது.இதே காலத்தில், தனி நபர் கடன், 17.9 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 8,18,800 கோடியில் இருந்து, 9,65,300 கோடி ரூபா­யாக உயர்ந்துள்­ளது.இதே மாதத்தில், முன்­னு­ரிமை துறை­க­ளுக்கு, வங்­கிகள் வழங்­கிய கடன், 17.6 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 13,98,400 கோடியில் இருந்து, 16,44,500 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.
பண்ணை கடன்:தொழில் துறைக்­கான கடன், வளர்ச்சி கண்­டுள்ள நிலையில், சென்ற செப்­டம்பர் மாதம், வங்­கி­களின் பண்ணைக் கடன் வளர்ச்சி, 13.2 சத­வீதம் என்ற அளவில் குறைந்­துள்­ளது. இது, சென்ற ஆண்டு, இதே மாதத்தில், 20 சத­வீ­த­மாக காணப்­பட்­டது.இதே மாதத்தில், கிரெடிட் கார்டு கடன்­களின் நிலுவை, 2.1 சத­வீதம் அதி­க­ரித்து, 23,500 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.47 வங்­கிகள் வழங்­கிய உணவு சாரா கடன்­களின் அடிப்­ப­டையில், மேற்­கண்ட புள்­ளி­விவரம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.
தற்­போது பண்­டிகை காலம் என்­பதால், வங்­கி­களின் உணவு சாரா கடன் வளர்­ச்சி மேலும் அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.மேலும், பல வங்­கிகள், கடன்­க­ளுக்­கான வட்­டி விகிதத்தை குறைத்­துள்­ளதால், வங்­கி­களின் ஒட்­டு­மொத்த கடன் அதி­க­ரிக்கும் என, தெரி­கி­றது.நாட்டின் மிகப் பெரிய பொதுத்­துறை வங்­கி­யான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, கார் கடன்­க­ளுக்­கான வட்­டியை, 10.55 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளது. மேலும், கடன் தொகையில், 0.51 சத­வீதம் என்ற அளவில் வசூ­லிக்­கப்­பட்டு வந்த, பரி­சீலனைக் கட்­ட­ணமும், ஒரே சீராக, 500 ரூபாய் என, நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.
வாகன கடன்:இதே­போன்று, பஞ்சாப் நேஷனல் பேங்க், கார் கட­னுக்­கான வட்­டியை, 10.65 சத­வீ­த­மாக குறைத்­துள்­ளது. மேலும், இரு­சக்­கர வாகனம் மற்றும் நுகர்வோர் சாதனக் கடனுக்­கான வட்­டியும், முறையே, 12.2 சத­வீதம் மற்றும், 12.75 சத­வீ­த­ மாக குறைக்­கப்­பட்­டுள்­ளன.இவை தவிர, பல வங்­கிகள், பண்டிகை காலத்தை முன்­னிட்டு, பல்­வேறு கடன்­க­ளுக்­கான வட்டியை குறைத்­துள்­ளதால், நடப்பு அக்­டோபர் மாதமும், வங்­கி­களின் கடன் வளர்ச்சி அதிக­ரிக்கும் என, தெரி­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)