பதிவு செய்த நாள்
28 அக்2013
01:25
பெங்களூரு:பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கு ( பீ.ஐ.ஏ.எல்.,), 203 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது தொடர்பாக, தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.நிதி நெருக்கடி காரண மாக, விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த ஓராண்டாக முடங்கியுள்ளது. இந்நிறுவனம், கடந்த 2008–12ம் ஆண்டுகளில், பெங்களூரு பன்னாட்டு விமான நிலைய பயனாளர் மேம்பாட்டு கட்டணம் மற்றும் பயணிகள் சேவைக் கட்டணமாக, 203 கோடி ரூபாயை விமான பயணிகளிடம் இருந்து வசூலித்துள்ளது.இத்தொகையை, பீ.ஐ.ஏ.எல்.,க்கு கிங்பிஷர் தர வேண்டும்.
ஆனால், அவ்வாறு செய்யாமல் மோசடி செய்து விட்டதாக, பி.ஐ.ஏ.எல்., குற்றம் சாட்டியுள்ளது.இது தொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் விஜய் மல்லையா மீது, கிரிமினல் நடவடிக்கைக்கு உத்தரவிடக் கோரி, பெங்களூரு மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில், பீ.ஐ.ஏ.எல்., மனு தாக்கல் செய்தது.
இம்மனுவை விசாரித்த, நீதிபதி, இவ்வழக்கு தொடர்பாக, கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் விஜய் மல்லையா மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.இது தொடர்பாக, விமான நிலைய காவல் உதவி ஆணையர் கமால் பந்த் கூறியதாவது:கோர்ட் உத்தரவை தொடர்ந்து, விஜய் மல்லையா மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் மீது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|