80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை ... இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரிப்பு: இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளால் இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வருவது அதிகரிப்பு: இறக்குமதிக்கான ... ...
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2013
00:45

புதுடில்லி: நடப்பாண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், இந்தியாவிற்கு வருகை தந்தவர்களின் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 47.41 லட்சமாக அதிகரித்து உள்ளது.விழிப்புணர்வு முகாம்இது, கடந்தாண்டின் இதே
காலத்தில், வருகை தந்த பயணிகள் எண்ணிக்கையை (45.67 லட்சம்) விட, 3.8 சதவீதம் அதிகமாகும் என,மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசு, வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைகவரும் வகையில், உலகின் பல்வேறு நாடுகளில், விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகிறது.

வெளிநாடுகளிலிருந்து, வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அன்னியச் செலாவணி வரத்தும் உயர்ந்துள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், இந்தியாவிற்கு வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை, 4.36 லட்சமாக இருந்தது. இது, கடந்தாண்டின் இதேமாதத்தில், 4.12 லட்சமாக இருந்தது. இருப்பினும், கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இந்த எண்ணிக்கை, 4.17 லட்சமாக இருந்தது.நடப்பாண்டின் செப்டம்பர் வரையிலான ஒன்பது மாத காலத்தில், சுற்றுலா பயணிகளின் வாயிலாக, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், 75,214 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைத்துள்ளது.

இது, கடந்தாண்டின் இதேகாலத்தில் கிடைத்ததை (66,061 கோடி ரூபாய்) விட, 13.9 சதவீதம் அதிகமாகும்.கணக்கீட்டு காலத்தில், டாலர் அடிப்படையில், சுற்றுலா பயணிகள் வாயிலாக கிடைத்த அன்னியச் செலாவணி, 5.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1,249 கோடி டாலரிலிருந்து, 1,320 கோடி டாலராக உயர்ந்துள்ளது.அன்னிய செலாவணிஅதேசமயம், செப்டம்பர் மாதத்தில், வெளி நாட்டு சுற்றுலா பயணிகள்வாயிலாக கிடைத்த அன்னியச்செலாவணி, 3.6 சதவீதம் குறைந்து, 118 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 122 கோடி டாலராக இருந்ததுஎன, சுற்றுலா அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)