பதிவு செய்த நாள்
01 நவ2013
00:41
மும்பை: அக்டோபர் 15ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன், 17.04 சதவீதம் வளர்ச்சி கண்டு, 55,22,375 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வட்டி விகிதம்இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 47,18,342 கோடி ரூபாயாகஇருந்ததுஎன, ரிசர்வ்வங்கியின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது
வெளிச்சந்தையில், வர்த்தக ஆவணங்கள் போன்றவற்றின் அடிப்படையில் வாங்கப்படும் கடனுக்கான வட்டி விகிதம் அதிகமாக இருந்ததால், இந்திய நிறுவனங்கள், வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவது அதிகரித்தது. இதன் காரணமாகவே, கணக்கீட்டு காலத்தில், உணவு சாரா வங்கி கடன் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அக்டோபர் 15ம் தேதி வரையிலான காலத்தில், வங்கிகள் திரட்டிய டெபாசிட், 14.36 சதவீதம் வளர்ச்சி கண்டு, 73,05,816 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 63,88,122 கோடி ரூபாயாக இருந்தது.மதிப்பீட்டு காலத்தில், குறித்த கால டெபாசிட் 14.94 சதவீதம் வளர்ச்சி கண்டு, 58.03 லட்சம் கோடியிலிருந்து, 66.70 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
\அதிகரிப்பு:எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறத்தக்க டிமாண்ட் டெபாசிட், 8.72 சதவீதம் உயர்ந்து, 5.85 லட்சம் கோடியிலிருந்து, 6.36 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|