பதிவு செய்த நாள்
01 நவ2013
00:54
புதுடில்லி: சுற்றுச் சூழல் சார்ந்த, ஜவுளி பதப்படுத்துதல் துறையின் மேம்பாட்டிற்கான பசுமைத் திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.சுற்றுச்சூழல்இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஜவுளி பதப்படுத்துதல் துறை சார்ந்த நிறுவனங்கள், சுற்றுச் சூழல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ‘ஒருங்கிணைந்த பதனீட்டு மேம்பாட்டு திட்டம் –ஐ.பி.டீ.எஸ்' செயல்படுத்தப்படும்.இதன்படி, ஜவுளி பதப்படுத்துதல் தொழில் சார்ந்த 4–6 விரிவாக்க பகுதிகளும், 3–5 புதிய பகுதிகளும் ஏற்படுத்தப்படும். அவை, பொதுவான, சாயக் கழிவு சுத்திகரிப்பு மையம், பசுமை அல்லது மரபு சாரா எரிசக்தி அடிப்படையிலான, துணை மின் உற்பத்தி நிலையம், குடிநீர் மற்றும் வடிகால் குழாய்கள், தேவையான சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை கொண்டதாக இருக்கும்.தற்போதுள்ள ஜவுளி பதப்படுத்தும் பகுதிகள், குறிப்பாக நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தவும், ஜவுளி பதனீட்டு துறையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், இத்திட்டம், துணை புரியும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதிஜவுளி பதப்படுத்தும் தொழிலை, பசுமை தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதன் மூலம், ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|