ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு ... 50 சதவீத குறைந்த கட்டணத்தில் விமான பயணம் 50 சதவீத குறைந்த கட்டணத்தில் விமான பயணம் ...
வர்த்தகம் » ஜவுளி
ஜவுளி பதனீட்டு துறை மேம்பாட்டிற்குரூ.500 கோடியில் பசுமை திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2013
00:54

புதுடில்லி: சுற்றுச் சூழல் சார்ந்த, ஜவுளி பதப்படுத்துதல் துறையின் மேம்பாட்டிற்கான பசுமைத் திட்டத்திற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஒப்புதல் அளித்துள்ளது.சுற்றுச்சூழல்இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:ஜவுளி பதப்படுத்துதல் துறை சார்ந்த நிறுவனங்கள், சுற்றுச் சூழல் சார்ந்த பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. இதை கருத்தில் கொண்டு, நடப்பு, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ‘ஒருங்கிணைந்த பதனீட்டு மேம்பாட்டு திட்டம் –ஐ.பி.டீ.எஸ்' செயல்படுத்தப்படும்.இதன்படி, ஜவுளி பதப்படுத்துதல் தொழில் சார்ந்த 4–6 விரிவாக்க பகுதிகளும், 3–5 புதிய பகுதிகளும் ஏற்படுத்தப்படும். அவை, பொதுவான, சாயக் கழிவு சுத்திகரிப்பு மையம், பசுமை அல்லது மரபு சாரா எரிசக்தி அடிப்படையிலான, துணை மின் உற்பத்தி நிலையம், குடிநீர் மற்றும் வடிகால் குழாய்கள், தேவையான சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை கொண்டதாக இருக்கும்.தற்போதுள்ள ஜவுளி பதப்படுத்தும் பகுதிகள், குறிப்பாக நீர் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தவும், ஜவுளி பதனீட்டு துறையில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும், இத்திட்டம், துணை புரியும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதிஜவுளி பதப்படுத்தும் தொழிலை, பசுமை தொழில்நுட்பத்திற்கு மாற்றுவதன் மூலம், ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு, மத்திய அரசு, மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)