ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவுஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.224 குறைவு ... 50 சதவீத குறைந்த கட்டணத்தில் விமான பயணம் 50 சதவீத குறைந்த கட்டணத்தில் விமான பயணம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா: டெபாசிட்டிற்கு வட்டி அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 நவ
2013
00:59

புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த மிகப் பெரிய வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, குறிப்பிட்ட சில டெபாசிட்டுகளுக்கான வட்டியை 0.20 சதவீதம் உயர்த்தியுள்ளது.இதன்படி, 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக, 180–210 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும், குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 6.80 சதவீதத்திலிருந்து, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகமேற்கொள்ளப்படும் டெபாசிட்டு களுக்கான வட்டி, 0.25 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை குறைத்துள்ளது. குறிப்பாக, 7–60 நாட்கள் வரையில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டிற்கான வட்டி, 2 சதவீதம் குறைக்கப்பட்டு, 8.5 சதவீதத்திலிருந்து, 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 61 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள்ளாக மேற்கொள்ளப்படும், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி, 0.50 சதவீதம் மட்டும் குறைக்கப்பட்டு, 8.25 சதவீதத்திலிருந்து, 7.75 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. அதேசமயம், 2–10 வருடத்திற்குள்ளாக மேற்கொள்ளப்படும் டெபாசிட்டிற்கான வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வட்டி விகிதம், இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக, இவ்வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில், ரிசர்வ் வங்கி, வங்கிகள், குறுகிய கால அடிப்படையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ), 0.25 சதவீதம் உயர்த்தி, 7.75 சதவீதமாக அதிகரித்தது.
வங்கிகள், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும், அவசர கால கடனுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 8.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)