பதிவு செய்த நாள்
01 நவ2013
00:59
புதுடில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த மிகப் பெரிய வங்கியான, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, குறிப்பிட்ட சில டெபாசிட்டுகளுக்கான வட்டியை 0.20 சதவீதம் உயர்த்தியுள்ளது.இதன்படி, 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக, 180–210 நாட்களுக்குள் மேற்கொள்ளப்படும், குறித்த கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம், 6.80 சதவீதத்திலிருந்து, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதேசமயம், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாகமேற்கொள்ளப்படும் டெபாசிட்டு களுக்கான வட்டி, 0.25 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை குறைத்துள்ளது. குறிப்பாக, 7–60 நாட்கள் வரையில் மேற்கொள்ளப்படும் டெபாசிட்டிற்கான வட்டி, 2 சதவீதம் குறைக்கப்பட்டு, 8.5 சதவீதத்திலிருந்து, 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 61 நாட்கள் முதல் ஒரு வருடத்திற்குள்ளாக மேற்கொள்ளப்படும், ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி, 0.50 சதவீதம் மட்டும் குறைக்கப்பட்டு, 8.25 சதவீதத்திலிருந்து, 7.75 சதவீதமாக குறைக்கப் பட்டுள்ளது. அதேசமயம், 2–10 வருடத்திற்குள்ளாக மேற்கொள்ளப்படும் டெபாசிட்டிற்கான வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 8.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய வட்டி விகிதம், இன்று முதல் நடைமுறைக்கு வர உள்ளதாக, இவ்வங்கியின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அண்மையில், ரிசர்வ் வங்கி, வங்கிகள், குறுகிய கால அடிப்படையில், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதத்தை (ரெப்போ), 0.25 சதவீதம் உயர்த்தி, 7.75 சதவீதமாக அதிகரித்தது.
வங்கிகள், ரிசர்வ் வங்கியிடமிருந்து பெறும், அவசர கால கடனுக்கான வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 8.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|